டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறை.. செயல்படும் நேரம் குறைப்பு.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் டோக்கன் முறையை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், திருமண நிகழ்வுகள், திரையரங்கங்கள், கடைகள் ஆகியவற்றுக்கும் நேரக்கட்டுப்பாட்டைத் தமிழக அரசு அறிவித்தது.

நேற்று முதலில் வெளியான அறிவிப்பில் டாஸ்மாக் கடைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை. அதன் பின்னர், அரசின் புதிய கட்டுப்பாடுகள் டாஸ்மாக் கடைகளும் பொருந்தும் என்றும் மதுபான கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் அரசு அறிவித்தது.. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு தற்போது புதிய நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மதுபான கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணி முதல் வரை மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு மேல் டோக்கன்களை வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 55 வயதைக் கடந்த மற்றும் இணை நோய் உள்ள பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.. மேலும் மாஸ்க் அணிந்து வரும் வாடிக்கையாளர்கள் மட்டும் மதுபானத்தை விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications