புத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு
சென்னை: தினமும் புத்தகம் வாசிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்றும் வாசிப்பு மனிதனை செழுமைப்படுத்தும் கருவி எனவும் திமுக மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் ஏற்பாடு செய்த இளைப்பாறுவோம் இலக்கிய நிழலில் என்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறினார்.
மேலும், பாரதியார், பாரதிதாசன், இன்குலாப் போன்றவர்களின் படைப்புகளை வாசித்தால் அது யாரையும் கவிதைகள் எழுத தூண்டும் எனக் குறிப்பிட்டார்.

திருச்சி சிவா
இளைப்பாறுவோம் இலக்கிய நிழலில் என்ற தலைப்பில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசிய திருச்சி சிவா, தமிழ் மொழியை போல் ஒரு மொழியை உலகில் எங்கும் பார்க்க முடியாது எனக் கூறினார். மேலும், உலக மொழிகளில் தமிழை போன்று ஒரு இனிமை வேறு எந்த மொழிக்கும் கிடையாது என புகழாரம் சூட்டினார். உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என பெருமிதம் தெரிவித்தார்.

எழுதுகோல்
செங்கோல் பெரிதா எழுதுகோல் பெரிதா என்றால் எழுதுகோல் தான் பெரிது என்றும், இதன் காரணமாகவே 2,000 ஆண்டுகளை கடந்தும் திருவள்ளுவர் இன்னும் வாழ்ந்து வருவதாக திருச்சி சிவா தெரிவித்தார். அந்தளவுக்கு எழுதுகோல் வலிமை வாய்ந்தது எனக் கூறினார். மேலும், இன்று அலைபேசி உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் அனைவரும் எழுத்தாளர்களாக எழுதத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இரவு 2 மணி வரை
கொரோனா காலத்தில் தற்போது வீட்டில் இருப்பதால் புத்தகம் வாசிப்பு தான் தனது பொழுதுபோக்கு என்றும், இரவில் 2 மணி வரை கூட புத்தகங்கள் வாசிப்பதாகவும் தெரிவித்தார். புத்தகம் வாசிப்பதன் மூலம் தான் மனிதன் செழுமையடைய முடியும் என திருச்சி சிவா தெரிவித்தார். அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர் தினமும் 20 பக்கங்களாவது புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் என்றும், இதனை அவர்களே கூறக் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

20-ம் நூற்றாண்டு
20-ம் நூற்றாண்டி தான் தமிழ் இலக்கியம் செழுமை அடையத் தொடங்கியதாகவும், இன்று எழுத்தாளர்களும், கவிஞர்களும் பெருகிவிட்டதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். காணொலி மூலம் நடைபெற்ற இந்த இலக்கிய கருத்தரங்கை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் ஏற்பாடு செய்திருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications