சென்னையில் கட்டுக்கடங்காத கொரோனா பரவல்... கட்டுப்பாடுகளை கடுமையாக்கக் கோரும் நிபுணர்கள்
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வீரியம் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் , பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் சென்னையை பொறுத்தவரை மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

சென்னையில் வீரியம்
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கொரோனா பரவலின் தாக்கம் வீரியமாக உள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு குறையாமல் கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக பார்க்கப்படுவது நெருக்கடியான இடத்தில் மக்கள் அடர்த்தியாக வாழ்வது தான். சென்னையை பொறுத்தவரை காற்றை விட வேகமாக கொரோனா பரவுவதால் மக்கள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.

தீவிர முயற்சி
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதோடு, தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் குழுவையும் களமிறக்கியுள்ளது. மேலும், மண்டலம் வாரியாக கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 5 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மெத்தனம்
கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்குமாறு அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அதனை பொருட்படுத்தாது சாலைகளில் சுற்றுவோர் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். கொரோனா நம்மை ஒன்றும் செய்துவிடாது என்ற அதீத நம்பிக்கையும், மெத்தனமுமே இதற்கு காரணம். தொடக்கத்தில் நோயாளியின் பயண வரலாறு மூலம் தொற்றுக்கான காரணம் கண்டறியப்பட்டது. ஆனால், இன்றுள்ள சூழலில் யார் மூலம் பரவுகிறது என்பதை கண்டறிய முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு
சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் நோய் பரவல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சுகின்றனர் மருத்துவ நிபுணர்கள். மற்ற மாவட்டங்களில் உள்ள தளர்வுகள் போல் சென்னைக்கு தளர்வு அளிக்கப்படக் கூடாது என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், பொதுவிடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications