Valimai: வலிமைன்னா என்னா தெரியுமா?.. Strength, Power-ஐ தாண்டி அஜித் சொன்ன புதிய விளக்கம்!
சென்னை: 2 ஆண்டுகளாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வலிமை குறித்த மிகப் பெரிய "அப்டேட்" கிடைத்துவிட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
போனி கபூர் தயாரிப்பில் உருவான வலிமை திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் அஜித்குமார் நேர்மையான போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளார். இந்த படத்தில் சென்னையில் இளைஞர்களை கெடுக்கும் போதை பொருட்களை சப்ளை செய்யும் மிகப் பெரிய நெட்வொர்க்கை பிடிக்கிறாரா இல்லையா என்பதுதான் வலிமை படத்தின் திரைக்கதை.
சின்ன சின்ன தவறுகளை செய்யும் நபர்களை விரட்டி பிடிக்கிறார். அவ்வாறு விரட்டி பிடிக்கும் ஒருவரிடம் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கிறார். அப்போது எத்தனையாவது வரை படிச்சிருக்கிறாய் என அஜித் கேட்பார், அதற்கு அந்த திருடன், 5ஆவது வரை படித்தேன், அதற்கு பிறகு எனது அப்பா இறந்துவிட்டார், அதனால் படிக்கவில்லை என்பார்.

வறுமையில் தப்பா?
அதற்கு அஜித், ஏன் 5ஆவது வகுப்புக்கு மேல படிக்கக் கூடாதுனு சாகும் போது உங்கப்பா சத்தியம் வாங்கிட்டாரா என கேட்பார். பின்னர் எதற்காக திருடினாய் என கேட்ட போது, அந்த நபர், ஏதோ வறுமையில் தப்பி பண்ணிட்டேன் என்பார். அதற்கு அஜித், வறுமையில் தப்பு பண்ணிட்டேனு சொல்லி உழைச்சி சம்பாதிக்கிற ஏழைகளை கேவலப்படுத்தாதே என்பார்.

சத்திய சோதனை
பின்னர் அந்த திருடனின் மனைவியை வரவழைத்து அவரிடம் கட்டாக பணத்தை கொடுத்து, இதை செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கூறும் அஜித், சத்திய சோதனை புத்தகத்தை கொடுத்து , உன் கணவர் வீட்டுக்கு வந்ததும் இதை அவருக்கு படித்துக் காட்டு என்பார். சிறிய கேஸில் ஸ்டேஷன் சென்றாலே அடித்து துவம்சம் செய்யும் இந்த காலத்தில் தவறு செய்பவர்கள் திருந்த சத்திய சோதனையை கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

போதை பொருள்
அது போல் சென்னையில் நடக்கும் போதை பொருள் சப்ளை கும்பலை பிடிப்பதற்காக அஜித், கமிஷனர் அலுவலகத்திற்கு வரும் போது அவரை வரவேற்கும் அதிகாரி ஒருவர் வெல்கம் டு தி சென்னை சார் என கூறி உங்களை வரவேற்க மக்கள் People's Cop என்ற ஹேஷ்டேக்கை டிரென்டாக்கி வருவதாகவும் கூறுவார். மக்கள் முதல்வர், மக்கள் பிரதமர் என்ற வரிசையில் People's Cop டிரென்ட் செட்டாக மாறியுள்ளது.

திருட்டு பயலா?
வில்லன் கார்த்திகேயன் முதல்முறையாக அஜித்திடம் பேசுவார். அப்போது அஜித், சொல்லுடா திருட்டு பயலே என்பார். அதற்கு வில்லன், திருட்டுப் பயலா, ஒரு பொருளை ஒருத்தனால் காப்பாற்ற முடியவில்லை என்றால் அதை வச்சிருக்கும் தகுதியை அவன் இழந்துவிடுகிறான். வலிமையா இருக்கிறவன் அவனுக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துப்பான் என்பார்.

வலிமை என்றால் என்ன?
அதற்கு அஜித், வலிமைன்றது அடுத்தவனை காப்பாத்தத்தான், அழிக்க இல்ல! நல்லவன் காப்பாத்துவான், கெட்டவன் அழிப்பான். நல்லவன்தான் ஜெயிப்பான் என்பார். அதற்கு வில்லன், நல்லது கெட்டது என்ற வார்த்தையே இயற்கைக்கு எதிரானது. வரலாற்றை படி, நல்லவன் கதையில் மட்டும்தான் ஜெயிப்பான், நிஜத்தில் அல்ல என ஒரு டயலாக் வரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications