தமிழக கஜானாவை துடைத்து வச்சிருக்காங்க.. நிதி நிலையை அம்பலப்படுத்த வெள்ளை அறிக்கை- விஜய் அதிரடி
சென்னை: கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் அதிகரித்திருக்கிறது. எனவே தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன் என்று விஜய் கூறியிருக்கிறார்.
முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் பேசிய விஜய், "தமிழ்நாட்டின் கஜானா காலியாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிலையை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

எனவே நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறேன். என்ன நிலைமையில் சிஸ்டம் இருக்கிறது என்பதை போய் பார்த்தால்தான் தெரியும்.
நான் மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. உங்களில் ஒருவன், உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, அப்படித்தான் உணர்கிறேன். நீங்களும் அப்படி நினைத்ததால்தான் சினிமாவில் எனக்கு பெரிய இடத்தை கொடுத்தீர்கள். அதெபோல அரசியலிலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். உங்களில் ஒருவனாக என்னை வரவேற்றீர்கள்.
எனக்காக உடன் நின்றதால் உங்களுக்கும் அவமானங்கள் நேர்தது. அதை பெரிதுப்படுத்தாமல் என்னுடன் நின்று என்னை பெற்றிப்பெற வைத்திருக்கிருக்கிறீர்கள். முதலமைச்சர் கனவை நிஜமாக்கியிருக்கிறீர்கள்.
உறவுகளே சொந்தங்களே! நான் தேவ தூதன் கிடையாது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றமாட்டேன். எது சாத்தியமோ அதை செய்வேன். சாத்தியமில்லாததையும் செய்வேன்" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு திமுக அரசு புதியதாக பொறுப்பேற்றபோது அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications