மகன் மறைவுக்கு பிறகு மன அழுத்தத்திலேயே இருந்தார் விவேக்... அவரது மறைவு பேரிழப்பு - பிரேமலதா
எல்லாரையும் சிரிக்க வைத்த விவேக், தனது மகன் மறைவுக்கு பிறகு மன அழுத்தத்திலேயே இருந்ததை பார்த்திருக்கிறோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னை: எல்லாரையும் சிரிக்க வைத்த விவேக், தனது மகன் மறைவுக்கு பிறகு மன அழுத்தத்திலேயே இருந்ததை பார்த்திருக்கிறோம். என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். விவேக்கின் அகால மரணம் திரையுலகினருக்கு மட்டுமல்ல, குடும்பத்தாருக்கு மட்டுமல்ல. தமிழகத்துக்கே இது ஒரு மிகப்பெரிய இழப்பு என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
Recommended Video
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகினர் பலரும் அரசியல் பிரமுகர்களும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, 'விவேக்கின் அகால மரணம் திரையுலகினருக்கு மட்டுமல்ல, குடும்பத்தாருக்கு மட்டுமல்ல. தமிழகத்துக்கே இது ஒரு மிகப்பெரிய இழப்பு என்று கூறினார்.
சின்னக் கலைவாணர் என்று திரையுலகத்தாலும் மக்களாலும் போற்றப்பட்டவர். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறைக் கொண்ட அவர் லட்சக் கணக்கான மரங்களை நட்டார். சமூக சேவைகளை செய்தார்.
''சமூக பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர் விவேக்''.. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
எல்லாரையும் சிரிக்க வைத்த விவேக், தனது மகன் மறைவுக்கு பிறகு மன அழுத்தத்திலேயே இருந்ததை பார்த்திருக்கிறோம் என்றும் கூறினார் பிரேமலதா.
கேப்டன் மீது மிகப்பற்றுக் கொண்டவர். விஜயகாந்த் சொன்னதன் பேரிலேயே அஞ்சலி செலுத்த வந்தேன். தேமுதிக சார்பாக விவேக்கின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.