ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் நடந்தது என்ன - அப்பல்லோ டாக்டர் வாக்குமூலம்
ஜெயலலிதா இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக நலமுடன் இருந்ததாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்பு வரை நலமுடன் இருந்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நிலையான மற்றும் மருத்துவ நெறி முறைப்படியே சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். இதனையடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 150க்கும் அதிகமானோர் இடத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், மருத்துவ வல்லுனர்களை கொண்டு விசாரணை நடைபெறவில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடுத்த வழக்கில் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
அதை அடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு உறுதுணையாக அமைத்த நிலையில் நீதிமன்றம் விசாரணை ஆணையத்திற்கு தடையை நீக்கியது. அதுமுதல் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இளவரசி, ஓ.பன்னீர் செல்வத்திடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

மறு விசாரணை
நேற்றும் இன்றும் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராக பதில் அளித்துள்ளனர். மருத்துவர்கள் தமிழ் பழனி, செந்தில்குமார் உள்ளிட்டோர் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது, அப்பல்லோ மருத்துவர்களிடம் இன்றும் விசாரணை நடைபெற்ற நிலையில் நாளையும் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்மோ கருவி பொருத்தியது ஏன்
இன்றைய தினம் மருத்துவர்கள் நரசிம்மன் மற்றும் பால் ரமேஷ் ஆகியோர் இன்று ஆஜராகினர் அவர்களிடம் வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர் அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்படுவது தேவையா என்று கேட்பதற்காக அழைக்கப்பட்டதாகவும் அப்போது தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டதாகவும் பால் ரமேஷ் வாக்குமூலம் அளித்தார்.

ஜெயலலிதா மரணத்திற்கு முன் நடந்தது என்ன
தொடர்ந்து வாக்குமூலம் அளித்த மருத்துவர் நரசிம்மன் டிசம்பர் 1- 2016 அன்று அதாவது ஜெயலலிதா இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக ஜெயலிதாவை சந்தித்ததாகவும் அப்போது அவர் நலமுடன் இருந்ததாகவும் கூறினார். அதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம், கடந்த சில வாரங்களுக்கு முன் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மொத்தத்தில் 90 சதவீதம் விசாரணை நடந்து முடிந்துள்ளது. மரணத்தில் மர்மம் இல்லை என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

ஆணையம் விசாரணை நிறைவு
ஆணையம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது தரப்பு விசாரணையை நிறைவு செய்துள்ளனர். இதனையடுத்து அப்பல்லோ மருத்துவர்களிடம் நடத்தப்பட உள்ள குறுக்கு விசாரணையுடன் விசாரணை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 156 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications