ஐவர்மெக்டின் (ivermectin) மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்க கூடாது.. WHO எச்சரிக்கை
சென்னை: ஐவர்மெக்டின் (ivermectin) மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்க கூடாது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் பல்வேறு சிகிச்சை முறைகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. முக்கியமாக மலேரியாவிற்கு கொடுக்கப்படும் ஹைடிராக்சிகுளோரோகுயின் மருந்தை பரிந்துரைப்பது விமர்சனங்களுக்கு உள்ளாக்கி உள்ளது.
மேலும் பிளாஸ்மாதெரபி, ரெமிடிஸ்வர் கூட இன்னும் முழுமையாக கொரோனாவிற்கு எதிராக பயனளிக்கும் என்று உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஐவர்மெக்டின் (ivermectin) மாத்திரையும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

மாத்திரை
பல்வேறு வகை ஒட்டுண்ணிகளுக்கு எதிராக கொடுக்கப்படும் இந்த ஐவர்மெக்டின் (ivermectin) மாத்திரையை இந்தியாவில் தமிழகம் உட்பட பல பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். முக்கியமாக வீட்டில் சிகிச்சை பெறும், லேசான அறிகுறி கொண்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஐசிஏம்ஆர் பரிந்துரையின்படி இந்த மருந்து வழங்கப்படுகிறது.

ஏன்
இந்த நிலையில் ஐவர்மெக்டின் (ivermectin) மாத்திரைகளை கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்க கூடாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த மருந்து பாதுகாப்பானது, கொரோனாவிற்கு எதிராக ஆற்றல் மிக்கது என்று நிரூபிக்கப்படவில்லை. இதனால் முழு சோதனை இன்றி இதை மக்களுக்கு கொடுப்பதை உலக சுகாதார மையம் பரிந்துரைக்காது என்று WHOன் தலைமை சைன்டிஸ்ட் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் இல்லை
அதேபோல் இந்த மருந்தை உருவாக்கிய மெர்க் அண்ட் கோ நிறுவனமும், கொரோனாவிற்கு எதிராக எங்கள் மருந்து வேலை செய்யும் என்பதற்கான ஆதாரம் இல்லை. இதற்கான அறிவியல் ரீதியான சோதனை முடிவுகள் எதுவும் இல்லை. இதுவரை எங்களுக்கு இது தொடர்பான வலுவான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

நோயாளிகள்
கொரோனா நோயாளிகளுக்கு ஐவர்மெக்டின் (ivermectin) உதவுவதற்கான, நோயை குறைப்பதற்கான சின்ன ஆதாரம் கூட இதுவரை கிடைக்கவில்லை. ஐவர்மெக்டின் (ivermectin) மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு கொடுப்பதை நாங்கள் பரிந்துரை செய்ய மாட்டோம், என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications