சசிகலாவை மிக கடுமையாக எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி... அந்த காலத்து அச்சம்தான் காரணமாம்!
சென்னை: அதிமுகவுக்குள் சசிகலாவை மீண்டும் சேர்க்கவே கூடாது என்பதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக இருப்பதன் பின்னணிதான் இப்போது அக்கட்சியில் ஹாட் டாபிக்.
அதிமுகவுக்கு இரட்டை தலைமையை நீக்கி ஒற்றை தலைமையை கொண்டு வரவேண்டுமாயின் சசிகலாவை நாம் ஏற்க வேண்டும். உங்களுக்கு மட்டுமல்ல கொங்கு சமுதாயத்தையே எட்டிக் காயாக நினைக்கும் ஓபிஎஸ்சின் அதிகாரத்தை குறைக்க வேண்டுமாயின் சசிகலாவை ஏற்றுக் கொள்ளுங்கள் என மிக நெருக்கமான சீனியர் தலைவர்களே எடப்பாடியை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இதனை ஏற்காத எடப்பாடி, சசிகலாவை முன்பை விட அதிகமாக விமர்சித்து தள்ளுகிறார். எடப்பாடி ஏன் சசிகலாவை இந்தளவுக்கு வெறுக்க வேண்டும்? என்ன காரணம் ? என்று அதிமுக மாநில நிர்வாகிகள் மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள்.

புதிய கோஷ்டிகள் உருவாகும்
சசிகலா வந்தால் மட்டுமே கட்சி மீண்டும் உடைபடாமல் பாதுகாக்க முடியும் . இல்லையெனில் மாவட்டம் வாரியாக அதிமுகவில் கோஷ்டிகள் உருவாவதை தடுக்க முடியாது என்று எடப்பாடியை சந்திக்கும் நிர்வாகிகள் சொல்லி வருகின்றனர்.

கொங்கும் சப்போர்ட்?
மேலும், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சொன்னீர்களே, மேற்கு மாவட்டத்தில் கூட அதனை நிறைவேற்றவில்லை ; கொங்கு மண்டலத்தில் உள்ள மா.செ.க்கள் யாருமே அப்படி தீர்மானம் போடவில்லை. அப்படின்னா என்ன அர்த்தம்? கொங்கு மண்டலம் கூட சசிகலாவை ஏற்கலாம் என்பதுதானே!

எடப்பாடி பழனிசாமி பிடிவாதம்
அதனால் பிடிவாதத்தை விட்டுவிட்டு சசிகலாவை அதிமுகவுக்குள் அனுமதியுங்கள் அண்ணே என்று உரிமையாகவும் நிர்வாகிகள் எடப்பாடியை வலியுறுத்துகிறார்கள். ஆனாலும், சசிகலாவை எதிர்ப்பதை எடப்பாடி பழனிசாமி கைவிடவில்லை.
Recommended Video

அன்று சசிகலா செய்தது..
இதன் பின்னணி என விசாரித்தால், சசிகலாவை சேர்த்துக் கொண்டால் ஜெயலலிதாவோடு இருந்தபோது நடந்த நடைமுறைகளையே மீண்டும் அமல்படுத்துவார் என்கிற பயம்தான் எடப்பாடிக்கு இருக்கிறது. இப்போதும் சசிகலாவை மீண்டும் சேர்த்தால், அதையே அமல்படுத்துவார்... என்கிற அந்த அச்சம்தான் எடப்பாடி பழனிசாமிக்காம்... அதனால் தான் சசிகலாவை கடுமையாக எதிர்க்கிறார் என்று பின்னணி ரகசியத்தை போட்டுடைத்தார் மாஜி சீனியர் அமைச்சர் ஒருவர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications