பெங்களூர் - சென்னை பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. உதவியாளரின் பாலியல் தொல்லை.. பகீர் புகார்!
சென்னை : பெங்களூரில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் வந்த இளம்பெண்ணுக்கு பேருந்து உதவியாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து ஆன்லைன் முன்பதிவு நிறுவனத்திற்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சமீபத்தில் தனியார் சொகுசுப் பேருந்து மூலமாக பெங்களூரில் இருந்து சென்னை வந்துள்ளார். இரவு நேரத்தில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பேருந்தில் வேலை செய்யும் உதவியாளர், அந்தப் பெண்ணிடம் அத்துமீறி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், இதுகுறித்து பேருந்து நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும், பேருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்த இணையதள நிறுவனத்திற்கும் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து முன்பதிவு இணையதள நிறுவனம் பதிலளிக்காத நிலையில், பாலியல் சீண்டலாலும், அதுகுறித்து புகார் தெரிவித்தும் பதில் அளிக்காத இணையதள நிறுவனத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளானதால், பேருந்தை முன்பதிவு செய்த இணையதள நிறுவனம் தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்தப் பெண், இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications