பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவுக்கு.. 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. போலீசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன
சென்னை: தற்போது தலைமறைவாக உள்ள பப்ஜி மதனின் யூ டியூப் சேனல் நிர்வாகியாக இருந்த அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரை வரும் வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பப்ஜி உள்ளிட்ட வீடியோ கேம்கள் குறித்து நுட்பங்களை யூடியூப் தளத்தில் விளக்கிப் பிரபலமானவர் பப்ஜி மதன். யூடியூபில் கேமை விளையாடும்போது நேரலையிலேயே, பப்ஜி மதன் பெண்களை மிகவும் ஆபாசமாக வசைபாடுவார்
கடந்த சில தினங்களுக்கு முன் மதன் மீது புளியந்தோப்பு சைபர் க்ரைம் பிரிவில் இருவர் புகார் அளித்திருந்தனர். இது குறித்து விசாரிக்க போலீஸ் நிலையத்திற்கு நேரில் வரும்படி மதனிடம் போலீசார் தெரிவித்தனர்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
இருப்பினும் காவல் நிலையத்திற்கு வராமல் தலைமறைவானார் பப்ஜி மதன். இதையடுத்து பப்ஜி மதன் குறித்த பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுதல், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, டெலிகிராம் தளத்தில் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்வது பல புகார்கள் குவிந்தன.

பல பிரிவுகளில் வழக்குப்பதிவு
இதையடுத்து அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்களை ஆபாசமாகச் சித்தரித்துப் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மனைவிக்குத் தொடர்பு
இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் தந்தையிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 12 மணி நேரம் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் மதனின் யூட்யூப் சேனலின் நிர்வாகியாக அவரது மனைவி கிருத்திகாவே இருந்ததை சிபிசிஐடி கண்டுபிடித்தனர். பெண்கள் குறித்து ஆபாசமாகத் தொடர்ந்து பேசி வந்த பப்ஜி மதனின் யூடியூப் சேனலும் கிருத்திகாவின் மெயில் ஐடியை வைத்தே தொடங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற காவல்
இதையடுத்து போலீசார் மதனின் மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். போலீசார் அவரை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகள் கிருத்திகாவை வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டனர். விரைவில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications