100க்கு 100... பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வில் அனைவரும் தேர்ச்சி... கோவை மத்திய சிறை கைதிகள் அசத்தல்
கோவை: கோவை மத்திய சிறையில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் கோவை மத்திய சிறையில் தேர்வு எழுதிய கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ஒரேநாளில் வெளியிடப்பட்டுள்ளன. 12ம் வகுப்பில் 93.76 சதவீத மாணவர்களுகம், 10ம் வகுப்பில் 94.07 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த பொதுத்தேர்வை தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறை கைதிகளும் எழுதி இருந்தனர்கள். இதில் கோவை மத்திய சிறை கைதிகள் சாதனை படைத்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:

தேர்வெழுதிய சிறை கைதிகள்
கோவை மத்திய சிறையில் இருந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 20 கைதிகளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 33 கைதிகளும் எழுதினர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதனால் தேர்வு முடிவை அறிந்து கொள்வதில் மாணவர்களை போல் கைதிகளுக்கும் ஆவலாக இருந்தனர். இதையடுத்து சிறை நிர்வாகம் கைதிகளுக்கான தேர்வு முடிவை பார்த்து கூறியது.

100 சதவீத தேர்ச்சி
அதன்படி சிறையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 20 கைதிகளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 33 கைதிகள் என மொத்தம் 53 பேரும் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதுபற்றி சிறை நிர்வாகம் சார்பில், ‛‛தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை மத்திய சிறை 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தேர்ச்சி எவ்வளவு?
மேலும் கோவை மாவட்டத்தில் கோவை மாநகர், பொள்ளாச்சி, எஸ் எஸ் குளம், பேரூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை 524 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 827 மாணவர்கள், 19 ஆயிரத்து 804 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 636 பேர் எழுதினர். இதில் 17 ஆயிரத்து 584 மாணவர்களும் 19 ஆயிரத்து 27 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 661 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

9 வது இடத்தில் கோவை
மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.69 மாணவிகள் தேர்ச்சி வீதம் 92.38 ஆக உள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 92.38. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கோவை மாவட்டம் 14வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவில் கோவை மாவட்டம் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications