வாழ்விடத்தை விட்டு தர முடியாது.. ஒற்றை யானை நடத்தும் போராட்டம்.. ஒரு பாடம்.. நெட்டிசன்கள் பஞ்ச்!
Recommended Video

கோவை: ஒற்றை யானை தன் வாழ்விடத்தை விட்டுத் தர முடியாது என நடத்தும் போராட்டம் நமக்கான பாடம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மயக்க ஊசி போட்டு காட்டுக்கு விரட்டப்பட்ட சின்னத்தம்பி என்ற யானை உடுமலை பகுதிக்கு மீண்டும் வந்துவிட்டது. இந்த நிலையில் அந்த யானையை கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வன உயிரின ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்ததன் விளைவு சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என தமிழக அரசு கூறியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
|
மண்டியிட்டு
#சின்னத்தம்பி கற்றுத்தந்த பாடம்.
மதம் பிடித்து யாரையும் கொல்லவும் இல்லை!
மண்டியிட்டு கும்கியாக, கோவில் யானையாக பிச்சை எடுக்கவும் இல்லை!
யானை தன் பலம் அறிந்து அதன் போக்கில் சென்றால் மக்களின் ஆதரவு என்றும் இருக்கும்.
இது எல்லோருக்கும் பொருந்தும்!
|
இயற்கை
பூமி மனிதர்கள் மட்டும் வாழும் இடம் இல்லை என்பதை மனிதன் உணர்ந்தாலே, இயற்கை காப்பாற்றப்படும்...
கட்டுக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம், இயற்க்கையை மீட்போம்...
|
சின்னத்தம்பி
ஒற்றை யானை தன் வாழ்விடத்தை விட்டுத் தர முடியாது என நடத்தும் போராட்டம் நிச்சயம் நமக்கான பாடம்!.
ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட், மணல் கொள்ளை என்று நம்மை துரத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் மிருகங்களை எதிர்க்கும் தைரியத்தை நாம் சின்னத்தம்பியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
|
நண்பேன்டா
காட்டுக்குள் விரட்டலாம் என்று எண்ணிய வனத்துறை, சலீம், மாரியப்பன் என்னும் 2 கும்கி யானைகளை கொண்டு வந்தது. ஆனால்,இருவரையும் நட்பாக்கிக் கொண்ட #சின்னத்தம்பி, இருவருடனும் விளையாடி வருகிறான். அந்த யானைகள், #சின்னத்தம்பி ஐ காட்டுக்குள் விரட்டும் என்று தெரியவில்லை. #bringbackchinnathambi
|
நீதிமன்றம்
கொன்ற கன்றுக்கு நீதி கொடுத்த மனுநீதி சோழனின் வாரிசுகள், மயிலுக்கு போர்வை தந்த பாரியின் குடிகள் அப்படிதான் உயிர்நேயவாதிகளாக இருப்பார்கள் சின்னதம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என்று நீதிமன்றம் சென்று நீதி வாங்கியுள்ளார்கள்..
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications