இலங்கை அதிபர் வீட்டு முன்பு நடந்த போராட்ட பின்னணியில் தீவிரவாத சதி என்ற ஆளும் கட்சி.. ரணில் கண்டனம்
கொழும்பு: ‛‛இலங்கையில் மக்கள் பிரச்சனையை தீர்க்காததால் தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது இனம், பயங்கரவாத செயற்பாடு அல்ல'' என இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
Recommended Video
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சமடைந்துள்ளன. பொதுமக்கள் உணவு, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் இன்றி தவித்து வருகின்றனர்.
இலங்கை தலைநகர் கொழும்பு உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிர்ஹானா நகரில் உள்ள கோத்தபய ராஜபக்சேவின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ரணில் விக்ரமசிங்கே
இந்த போராட்டத்தை தொடர்ந்து தான் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இலங்கையில் நடக்கும் போராட்டம் குறித்து கூறியுள்ளதாவது:

அரசியல் நெருக்கடி
இலங்கையின் மிர்ஹானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுவரை காணப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்துள்ளது. தற்போதைய நிலை அரசியல் நடைமுறையின் வீழ்ச்சியாக மாற்றமடையும். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதில் அரசும், எதிர்க்கட்சியும் தோல்வியடைந்துள்ளது.

பயங்கரவாத செயற்பாடு அல்ல
இது இனவாதம், பயங்கராத செயற்பாடு அல்ல. இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதன் மூலம் நிலைமை வேறு விதமாக மாறிவிடும். நாம் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அமைதியான ஆர்ப்பாட்டத்தின்போது எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. அதேபோன்று வன்முறைக்கும் இடமளிக்கப்படக் கூடாது.

ஆர்ப்பாட்டங்களுக்கு உரிமை
மக்களுக்கு அமைதியான முறையில் சுதந்திரமாக நமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கும், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு உரிமை உள்ளது. மக்களின் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளக்கூடாது. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு கண்டன பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை உள்ளது. அதனால் கட்சி பேதமின்றி, தேசிய இணக்கப்பாட்டுடன் நாம் செயற்பட வேண்டியுள்ளது. அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும்போது நாம் இந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். நமது பிரச்சனைகளை வன்முறையின்றி அமைதியாக தீர்த்து கொள்வோம்'' என்றார்.

காரணம் என்ன
இலங்கை அதிபரின் வீட்டு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பயங்கரவாத சக்திகள் தான் முன்னெடுத்தன என ஆளும் கோத்தபய ராஜபக்சேவின் தரப்பு கூறியதை கண்டித்து தான் ரணில் விக்ரமசிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications