மாற்று ஜாதி பெண்ணுடன் மகன் திருமணம்.. ஆத்திரமடைந்த தந்தை.. கோடாரியால் தாக்கும் பகீர் வீடியோ
கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அருகே மாற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட மகனையும், மருமகளையும் வீட்டை விட்டு வெளியேற முதியவர் கோடாரியை கொண்டு தாக்கும் வீடியோ காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
Recommended Video
கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அடுத்த ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது இளைய மகன் மணிமாறன். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று ஜாதியை சேர்ந்த சத்யாவுடன் காதல் ஏற்பட்டது.
இதையடுத்து தனது வீட்டாரின் எதிர்ப்பை மீறி அந்த பெண்ணை மணிமாறன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஜெயராமன்
திருமணம் ஆன நாள் முதலே மணிமாறனின் தந்தை ஜெயராமன், மருமகள் சத்யாவை கண்டாலே ஆவதில்லை. அவரையும் மகனையும் ஜெயராமன் ஆபாசமாக பேசிவருவது , தகராறு செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவ்வப்போது அக்கம்பக்கத்தினர் வந்து சண்டையை விலக்கி விடுவது வாடிக்கையாக இருந்தது.

மணிமாறன் ஊரில் இல்லாத நேரம்
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி மணிமாறன் ஊரில் இல்லாத நேரத்தில் சத்யாவிடம் ஜெயராமன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து வெளியூரிலிருந்து வீட்டுக்கு வந்த மணிமாறனிடம் நடந்தவற்றை கூறி சத்யா அழுதுள்ளார். இதையடுத்து மணிமாறன் தந்தையிடம் போய் தனது மனைவியிடம் தகராறு செய்தது ஏன் என நியாயம் கேட்டுள்ளார்.

போர்டு
இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஜெயராமன், அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு விரட்டியதும் கோடாரியை கொண்டு வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மணிமாறன் கதவை மூடியதால் ஜெயராமனின் கோடாரி வெட்டு கதவில் விழுந்தது. இதில் மேலும் ஆத்திரமடைந்த ஜெயராமன் ஒரு டேபிள் மீது ஏறி ஸ்விட்ச் போர்டில் ஓங்கி வெட்ட அந்த போர்டு உடைந்துவிட்டது.

மின்சார கம்பி
எனினும் கோடாரியின் முனை மின்சார கம்பியில் படாததால் ஜெயராமன் உயிர் தப்பினார். இவ்வாறு வீட்டிலிருந்த ஒவ்வொரு பொருளையும் உடைத்துள்ளார். இதையடுத்து மணிமாறனின் சகோதரரும் ஜெயராமனுடன் சேர்ந்து கொண்டு சத்யாவிடம் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் அக்கம்பக்கத்தினர் செல்போனில் வீடியோவாக எடுத்ததை பார்த்ததும் ஜெயராமன் அங்கிருந்து தப்பினார்.

மாவட்ட எஸ்பி
இதையடுத்து வீட்டில் நடந்தவற்றை புகாராக எழுதி வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சத்யா புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னை ஜாதி பெயரை சொல்லி கணவர் வீட்டார் அவதூறு பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்பி உறுதியளித்துள்ளதாக தம்பதி தெரிவித்தனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications