உஷார்.. இந்தியாவில் திடீரென்று 16 சதவீதம் வரை அதிகரித்த கொரோனா பாதிப்பு.. மக்களே கவனமாக இருங்க!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 19,893 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது இன்று 16 சதவீதம் வரை கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனா பரவ துவங்கியது. அதன்பிறகு ஊரடங்கு அமலானது. தற்போது வரை கொரோனா 3 அலைகளாக பொதுமக்களை தாக்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில காலமாக குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநில கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

19,893 பேர் பாதிப்பு
அந்த வகையில் இன்று காலை சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் 19,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 037 ஆக அதிகரித்துள்ளது.

16 சதவீதம் வரை அதிகரிப்பு
நேற்றைய தினம் இந்தியாவில் கொரோனாவால் மொத்தம் 17,135 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அது அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 19,863 பேர் பாதிக்கப்பட்டதால் நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது இன்று 16 சதவீதம் வரை கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

98.50 சதவீதம் பேர் மீண்டனர்
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 20,419 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கெரோனா குணமானவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 24 ஆயிரத்து 029 ஆக அதிகரித்துள்ளது. அதாவது நாட்டில் கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை என்பது 98.50 சதவீதமாக உள்ளது.

53 பேர் பலி
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 53 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 478 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி தான் ஆயுதம்
பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள தடுப்பூசி தான் சிறந்த ஆயுதம் என மத்திய அரசு, மாநில அரசு கூறி வருகிறது. ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வரும் நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செப்டம்பர் மாதம் 28 ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை, முகாம்களில் இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 38 லட்சத்து 20 ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications