ஆம்பன் புயல் பாதிப்பு: தேசிய பேரழிவு என பிரகடனப்படுத்த 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
டெல்லி: மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவை உருக்குலைத்த ஆம்பன் புயல் பாதிப்பை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக 22 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கொரோனா லாக்டவுன் காலத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ20 லட்சம் கோடி நிதி உதவி என்பது கொடூரமான நகைச்சுவை என கடுமையாகவும் சாடினார் சோனியா.

இந்த கூட்டத்தின் முடிவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில், மேற்கு வங்கம், ஒடிஷாவில் அழிவை ஏற்படுத்திய ஆம்பன் (அம்பன், உம்பன்) புயல் பாதிப்பை தேசிய பேரழிவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆம்பன் புயல் தாக்கத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்புக்கு இடையே நிகழ்ந்துள்ள இப்பேரழிவில் இருந்து அந்த மாநிலங்கள் மீண்டு வர மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் வலியுறுத்தி இருக்கிறது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications