திகார் சிறையில் வழுக்கி விழுந்த ஆம்ஆத்மி மாஜி அமைச்சர் சத்யேந்திர ஜெயின்.. மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அவர் குளியலைறையில் வழுக்கி விழுந்ததாக கூறி போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி அரசின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ கடந்த 2017-ல் வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வேளையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை களத்தில் குதித்தது. இந்நிலையில் தான் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சத்யேந்திர ஜெயினை அதிரடியாக கைது செய்தது.
கடந்த ஆண்டு சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதில் உள்நோக்கம் இருப்பதாகவும், ஆம்ஆத்மி அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக அரசு மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் சத்யேந்திர ஜெயினை கைது செய்ததாக ஆம்ஆத்மி குற்றம்சாட்டியது.

இதற்கிடையே தான் சத்யேந்திர ஜெயின் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. இந்நிலையில் தான் திடீரென்று சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
அதாவது சிறையில் குளியலைக்கு சென்றபோது சத்யேந்திர ஜெயின் திடீரென வழுக்கி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்யேந்திர ஜெயினுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications