தடுப்பூசி .. இந்திய அரசின் உறுதியை நம்பாத ஆசிய அபிவிருத்தி வங்கி.. வளர்ச்சி கணிப்பை குறைத்தது!
டெல்லி: ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடிபி) இந்த ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 11 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது, கடந்த ஏப்ரல் மாதத்தில் 11 சதவீதம் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் , நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுப்பாடுகளை மேற்கோள்காட்டி வளர்ச்சிக்கான கணிப்பை குறைத்துள்ளது.
அத்துடன் 2022-23 வாக்கில் தான் இந்தியாவின் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்பார்க்கிறது. 2021ம் ஆண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் COVID-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று இந்திய அரசு உறுதியளித்து உள்ளது, ஆனால் ADB வங்கியோ இந்த கருத்தை நம்பவில்லை.
இந்தியாவில் எரிபொருள் மற்றும் உணவு விலைகள் எதிர்பார்த்ததை விட வேகமாக உயந்துள்ளது . இதனால் 2021-22 ஆம் ஆண்டிற்கான சராசரி பணவீக்கம் 5.2 இருக்கும் என்று கணித்திருந்த ஆசிய அபிவிருத்தி வங்கி இப்போது அதை 5.5 சதவீதமாக உயர்த்தி உள்ளது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி இந்த காலகட்டத்தில் சில்லறை பணவீக்கத்தை 5.1% ஆகத்தான் கணித்து இருந்தது.

இந்தியாவில் எப்படி
சில்லறை பணவீக்கம், மே மற்றும் ஜூன் மாதங்களில் 6.3% ஆக இருக்கிறது. இது 2022-23 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் விருப்பமான இலக்கு 4% ஐ விட 4.8% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 சதவீதத்தை தாண்டியது
2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் சராசரி பணவீக்கம் 6.2% ஆக இருந்தது. நாணயக் கொள்கை படி, ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய 2% -6% புள்ளிகளுக்குள் 3வது ஆண்டாக இருந்தது. ஆனால் இப்போது ஏடிபியின் கணிப்பு படி 6 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது.

இடையூறு
2022-23 நிதியாண்டில் இந்தியா 7.5% வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்ப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை காணமாக தெற்காசியா முழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதால் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையூறாக ஏற்பட்டது என்றும் அந்த வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி
ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2021 நிதியாண்டிற்கான தெற்காசியாவின் வளர்ச்சி பார்வை 9.5% இலிருந்து 8.9% ஆக குறைக்கப்படுகிறது. இந்தியாவுக்கான கணிப்பு 11ல் இருந்து 10.0% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் தெற்காசியாவின் பணவீக்க கணிப்பு 5.5% முதல் 5.8% வரை உயர்த்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
2020-21 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 1.6% ஆக மீண்டது, தொற்றுநோயின் இரண்டாவது அலை பல மாநில அரசாங்கங்களை கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளியது. ஏனெனில் புதிய COVID-19 கேஸ்கள் மே மாத தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 400,000 க்கும் அதிகமாக உயர்ந்தன. ஜூலை தொடக்கத்தில் 40,000 க்கும் அதிகமாக உள்ளது.

வெளியிட்ட புள்ளி விவரம்
தெற்காசிய அளவில் வளர்சசி விகிதம் எப்படி இருக்கும் என்பதையும் ஏடிபி கணித்துள்ளது. அதன்படி பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதால் தெற்காசியாவில் வருடாந்திர பணவீக்க கணிப்பை ஏப்ரல் மாதத்தில் 2.3 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக உயர்த்தி உள்ளது, விலை உயர்வு போக்குகள் காரணமாக அடுத்த ஆண்டு 2.7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. தெற்காசிய பிராந்தியத்தின் வளர்ச்சி முன்னறிவிப்பு இந்த ஆண்டில் 7.3% இல் இருந்து 7.2% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications