Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்னிபாத் பாரத் பந்த்- டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்-ஜார்க்கண்ட்டில் கல்வி நிறுவனங்கள் மூடல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அக்னிபாத் எனும் மத்திய பாஜக அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கைக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் போராட்டக்காரர்கள் குவிவதைத் தடுக்க நடத்தப்பட்ட வாகன சோதனையால் மிகப் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Agnipath BharatBandh: Heavy traffic jam in Delhi

அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்தில் பணிக்காலம் 4 ஆண்டுகள் என குறைக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் இளைஞர்கள் கொதிநிலையில் உள்ளனர்.

Agnipath BharatBandh: Heavy traffic jam in Delhi

அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வட இந்திய இளைஞர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் மிகப் பெரும் வன்முறையாக வெடித்துள்ளன. இதுவரை 60க்கும் மேற்பட்ட ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பீகாரில் பல ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. பாஜக தலைவர்கள் வீடுகள், பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டன. தென்னிந்தியாவில் தெலுங்கானாவின் செகந்திராபாத்திலும் இத்தகைய வன்முறை நிகழ்ந்தது. இதனால் வட இந்தியாவில் பல மாநிலங்களில் பதற்றம் நீடிக்கிறது.

Agnipath BharatBandh: Heavy traffic jam in Delhi

இதனிடையே இன்று அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தாலும் வட இந்திய மாநிலங்களில் கடும் பாதிப்பு உள்ளது. தலைநகர் டெல்லியில், பிற மாநில போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துகின்றனர். இதனால் டெல்லியில் மிக மோசமான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. டெல்லியில் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன.

Agnipath BharatBandh: Heavy traffic jam in Delhi

Recommended Video

    Agnipath வீரர்களுக்கு செக்யூரிட்டி பணி தருவோம்.. BJP நிர்வாகி சர்ச்சை பேச்சு! *India

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 22 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் ரயில் நிலையங்களில் பரிதவித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் ஏற்கனவே போர்க்களமான ஹவுராவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+