நாரதா ஸ்டிங் ஆபரேஷன்.. 3 சிட்டிங் திரிணமூல் எம்பிக்களை விசாரிக்க அனுமதி கோரிய சிபிஐ
டெல்லி: நாரதா வழக்கில் 3 திரிணமூல் எம்பிக்கள் மீது விசாரிக்க மக்களவை சபாநாயகரின் அனுமதியை சிபிஐ கோரியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாரதா செய்தி இணையதளம் சார்பில் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்களும் காவல் துறை அதிகாரிகள் சிலரும் ஒரு நிறுவனத்துக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக லஞ்சம் பெறுவதை போன்ற காணொலி பதிவு அதன் மூலம் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்பிக்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள், மேற்கு வங்க அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஆகியோருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதில் மேற்கு வங்கத்தின் டம்டம் தொகுதி எம்பி சௌகதா ராய், ஹௌரா எம்பி பிரசூன் பானர்ஜி, தம்லுக் தொகுதியின் முன்னாள் எம்பியும் மேற்கு வங்கத்தின் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான சுவேந்து அதிகாரி ஆகியோரின் பெயர்களையும் சிபிஐ சேர்ந்திருந்தது.
இதில் சௌகதா ராய், பராசத் எம்பி ககோலி கோஷ் , சுவேந்து அதிகாரி ஆகியோர் தலா 5 லட்சம் பெறுவது போலவும் , பானர்ஜி 4 லட்சம் லஞ்சம் பெறுவது போன்று ரகசிய நடவடிக்கை காணொலியில் இருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரஜா முகர்ஜி, எம்பி ககோலி கோஷ் உள்ளிட்ட 10 பேருக்கு சிபிஐ வியாழக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த 4 பேரிடமும் விசாரணை நடத்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சிபிஐ அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்துவிட்டால் அந்த 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications