மங்கி பாக்ஸ்! ஏர்போர்டில் டெஸ்டிங் .. உறுதி ஆனால் என்ன செய்ய வேண்டும்? மத்திய அரசு வழிகாட்டுதல்கள்
டெல்லி: உலக நாடுகளில்ல மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது தான் மெல்லக் குறைந்து வரும் நிலையில், இப்போது அடுத்த தலைவலியாக மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது. இது எங்கு அடுத்த பெருந்தொற்றாக பரவுமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் எண்டமிக் நோயாக இருந்த வைரஸ், இப்போது மற்ற நாடுகளிலும் பரவ தொடங்கி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோருக்கு இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மங்கி பாக்ஸ்
இந்தியாவில் இதுவரை யாருக்கும் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், எங்கு இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே உள்ளது. இந்தச் சூழலில் தான் மத்திய அரசு மங்கி பாக்ஸ் பாதிப்பு குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் நோய் பரவும் முறை, பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், டெஸ்டிங் உள்ளிட்ட பல்வேறு முறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள்
இந்த நோய்ப் பாதிப்பு பெரிதளவில் பரவாமல் இருக்கக் கண்காணிப்பு நடவடிக்கையும் புதிய வழக்கை விரைவாக அடையாளம் காண்பது முக்கியம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், நோய்ப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர் உடன் தொடர்பில் இருந்தவரை அடுத்த 21 நாட்களுக்குத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், இந்த நோய்ப் பாதிப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

செய்யக் கூடாது
நோய்ப் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருக்கக் கூடாது. நோயாளிகளைப் பார்க்கச் செல்லும் போது பிபிஇ கிட்களை அணிந்து செல்ல வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியே இந்த வைரஸ் இவ்வளவு வேகமாகப் பரவுவது இதுவே முதல்முறையாகும். இதற்கான காரணத்தை ஆய்வாளர்களும் உறுதியாகக் கூற முடியவில்லை. இருப்பினும், இப்போது வரை அச்சப்படத் தேவையில்லை என்றே அவர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video

தடுப்பது எப்படி
முதலில் நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்தவொரு பொருட்களுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது. அறிகுறி உள்ளவருடன் தொடர்பு ஏற்பட்டால்,கைகளை நன்கு கழுவ வேண்டும். நோயாளிகளைப் பார்த்துக் கொள்ளும் போது மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டும். இணை நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும் உள்ளிட்டவை அதில் கூறப்பட்டுள்ளது.

டெஸ்டிங் மற்றும் அறிகுறி
பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) சோதனை மூலம் ஒருவருக்கு இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதை எளிதாகக் கண்டறியலாம். பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து திரும்புவோருக்குக் கொப்புகள் இருந்தால் சோதனை செய்ய வேண்டும். வீங்கிய நிணநீர் கணுக்கள், காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள், பலவீனமாக உணர்வது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் டெஸ்டிங் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications