குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை வகுக்க ஜூலை வரை கால அவகாசம்..நாடாளுமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதற்கான விதிகளை வகுக்க ஜூலை 9ஆம் தேதி வரை மத்திய அரசு கால அவகாசம் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதாவது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த முஸ்லீம் அல்லாத இந்து, சீக்கியர்கள், சமணம், பௌத்தம், பார்சி, கிறிஸ்துவம் ஆகியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்வதே இந்த சட்ட மசோதாவின் நோக்கமாகும்.

இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் டிசம்பர் 12, 2019ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தார். இந்த சட்டத்தின் கீழ் மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை வந்தவர்கள் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள்.
அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கான சட்டத்திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதை லோக்சபா எம்பி விகே ஸ்ரீகந்தன் கேள்வி எழுப்பியிருந்தார். சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுகள் ஆகின்றன.
இதற்கான விதிமுறைகள் என்னென்ன என ஸ்ரீகந்தன் கேள்வி எழுப்பினார். இதற்கு உள்துறை அமைச்சகம் பதில் அளிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் இதற்கான விதிமுறைகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விதிகளை வகுக்க மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடர்பான குழுக்கள் முறையே ஏப்ரல் 9 மற்றும் ஜூலை 9 வரை காலஅவகாசம் அளித்துள்ளன என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications