Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலக்கரி தட்டுப்பாடு.. மின்தடை அபாயம்.. மின் உற்பத்தி நிலையங்களுக்கு மத்திய மின்துறை அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலக்கரிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

Recommended Video

    Tamilnadu-வில் போதுமான அளவு நிலக்கரி உள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

    இதில் நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களில் அடுத்த 3 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகப்படியான மின்தேவை உள்ளதால் அதிக நிலக்கரி தேவை ஏற்பட்டு தட்டுப்பாடு நீடிக்கிறது.

    சீனாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரிக்கு தேவை அதிகமாகி உள்ள நிலையில் இதனை உற்பத்தி செய்கிற வெளிநாடுகளில் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே நம்பி இருப்பதே நிலக்கரி பற்றாக்குறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    நிலக்கரி பற்றாக்குறை

    நிலக்கரி பற்றாக்குறை

    நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாக டெல்லி மாநில அரசு முதல்முறையாக மத்திய அரசிடம் புகார் தெரிவித்தது. ''டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு நாளைக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. நிலக்கரி விநியோகம் மேம்படவில்லை என்றால், இரண்டு நாட்களில் தலைநகர் டெல்லியில் மின்தடை ஏற்படும்'' என்று கூறியது. இதேபோல் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இருப்பு கையில் உள்ளது

    இருப்பு கையில் உள்ளது

    இதேபோல் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நீடிப்பதால் சில நாட்களில் நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கும் என்று பீதி தகவல்கள் உலா வந்தன நாட்டில் போதிய நிலக்கரி கையில் இருப்பதாகவும், மின்தடை ஏற்படாது என்றும் மத்திய அரசு விளக்கமாக கூறியது. இது தொடர்பாக மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ' நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு கையில் உள்ளது.

    இருளில் மூழ்கும் அபாயம்

    இருளில் மூழ்கும் அபாயம்

    மின்சார விநியோகம் பற்றிய அச்சம் முற்றிலும் தவறானது. மின் உற்பத்தி நிலையங்களில் 72 லட்சம் டன் நிலக்கரி என்று நான்கு நாட்கள் நிலக்கரி இருப்பு உள்ளது. நிலக்கரி நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவு விநியோகம் செய்யப்பட்டதால் கடந்த செப்டம்பர் மாதம் வரை மின்சார உற்பத்தி 24 சதவீதம் அதிகரித்துள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் வெள்ளத்தில் மூழ்குவதால் வழக்கமாக மழைக்காலங்களில் நிலக்கரி எடுப்பது பாதிக்கப்படுகிறது என்று மத்திய அரசு கூறி இருந்தது.

     மின்சார திறன்

    மின்சார திறன்

    இந்த நிலையில் மின்வாரியத்தின் தேவைக்கேற்ப மின் உற்பத்தி நிலையங்களின் உகந்த பயன்பாட்டை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மின்துறை அமைச்சகம் வெளியிட்டது. மின்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் சில மின் உற்பத்தி நிலையங்கள் எந்த நேரத்திலும் அவற்றின் முழு கொள்ளளவுக்கு உற்பத்தி செய்யவில்லை என்பது அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்களின் கீழ் கட்டுப்பாடுகள் இருப்பதால் பயன்படுத்தப்படாத மின்சார திறன் வெறுமென இருக்கிறது.

    தயாராக இருக்க வேண்டும்

    தயாராக இருக்க வேண்டும்

    பொதுநலன் கருதி பிற பயனர்கள் அல்லது நுகர்வோர்களுக்கு தேவைப்படும் இடத்தில், இத்தகைய மின்சாரம் அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய மின்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கட்டணக் கொள்கையின்படி 2016ன்படி மின் நிலையங்கள் எல்லா நேரங்களிலும் மின் விநியோகத்தை அனுப்ப தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    கொள்முதல் நிறுவனம்

    கொள்முதல் நிறுவனம்

    பி.பி.ஏ.வில் கையெழுத்திட்ட ஜெனரேட்டிங் ஸ்டேஷனில்(மின் உற்பத்தி நிலையம்) இருந்து 24 மணி நேரத்திற்கு பிறகு முழு அல்லது பகுதி திறன் கொண்ட எந்த காலத்திற்கும் மின்சாரம் திட்டமிட வேண்டாம் என்று கொள்முதல் நிறுவனம் முடிவு செய்தால் ஜெனரேட்டர் மின்சக்தி பரிமாற்றத்தில் அது மற்ற தேவைப்பட்ட இடத்துக்கு இலவசமாக விற்க முடியும்.

    நிலையான கட்டணம்

    நிலையான கட்டணம்

    டெவலப்பர் மற்றும் பிபிஏ வைத்திருக்கும் ப்ரோக்யூரர்கள் விற்பனையிலிருந்து பெறப்பட்ட லாபங்களை, மின் பரிமாற்றத்தில் 50:50 என்ற விகிதத்தில், தேவைப்படாவிட்டால் அல்லது வழங்கப்படாவிட்டால் PPA. மின்சாரம் சட்டம் 2003 பிரிவு 62 அல்லது பிரிவு 63 ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட மின்சாரம் விற்பனை விலைக்கும் ஆற்றல் கட்டண விகிதத்திற்கும் (ECR) உள்ள வித்தியாசமாக இத்தகைய ஆதாயம் கணக்கிடப்படும். நிலையான கட்டணம் தொடர்பான கொள்முதல் செய்பவரின் கடமை பிபி ஏ -க்கு இணங்கவே இருக்கும் என்று மத்திய மின்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+