கொரோனா ஊரடங்கு: தடுப்பூசி போடுவதில் தடைகள் ஏற்படக்கூடாது - மத்திய அரசு சுற்றறிக்கை
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப் படக்கூடாது என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது.
டெல்லி: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பல மாநிலங்களில், ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 2.75 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு முழு லாக்டவுன்
தமிழகத்தில் நேற்று 1,10,130 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 10,723 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 42 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

தடுப்பூசி போடும் பணி
இது போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப் படக்கூடாது என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது. இது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனிய பிரதேச அரசுகளுக்கும், மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கட்டுப்பாடுகளால் பாதிப்பு வரக்கூடாது
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பல மாநிலங்களில், ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது.

தடுப்பூசி மையம்
தடுப்பூசி மையத்திற்கு மக்கள் சென்று வருவதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது. கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில், மருத்துவமனையின் தனி கட்டடத்தில் தடுப்பூசி மையம் இருக்கவேண்டும். அதை, அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications