குட் நியூஸ்... 60 வயதைக் கடந்தவர்களுக்கு.. மார்ச் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி
டெல்லி: 60 வயதைக் கடந்தவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் என மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

60 வயதை கடந்தவர்களுக்கு
இந்நிலையில், இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள், மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அதில் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல 45 வயதைக் கடந்தவர்களில் ஏதேனும் உடல்நிலை பாதிப்புகள் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Array
நாடு முழுவதும் உள்ள 10,00 அரசு மையங்களிலும் 20,000 தனியார் மையங்களிலும் இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு மையங்களில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறிய அவர், தனியார் மையங்களில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கட்டண விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பிரதமர் மோடி
இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் சுமார் 27 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும், பல மாநில முதல் அமைச்சர்களும் 50 வயதைக் கடந்தவர்கள் என்பதால் அவர்களுக்கும் அடுத்த மாதம் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் துறைக்கு அனுமதி
அதேபோல அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார மையங்களில் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தனியார் துறையை அனுமதித்தால் குறைவான நேரத்தில் அதிக பேருக்கு தடுப்பூசிகளைச் செலுத்த முடியும் என தெரிவித்திருந்தனர். விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தனியார் துறையை அனுமதித்தால் 60 நாட்களில் 50 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்க முடியும் என்று கூறியிருந்தார்.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி
இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என டாக்டர் ரெட்டி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. சுமார் 91% பலன் அளிப்பதாலும் உற்பத்தி செய்யும் செலவும் குறைவு என்பதாலும் விரைவில் இந்தியாவில் மூன்றாவது தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி-க்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications