இந்தியா-சீனா எல்லை விவகாரம்- ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிட கூடாது- பாதுகாப்பு அமைச்சகம் அட்வைஸ்
டெல்லி: இந்தியா- சீனா எல்லை விவகாரங்களில் ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
Recommended Video
சிக்கிம், லடாக் எல்லை பகுதிகளில் சீனா தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறது. 2017-ம் ஆண்டு பூட்டானின் டோக்லாமை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தது.
இதனை இந்தியா கடுமையாக எதிர்த்தது. பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளால் சுமூக நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் லடாக் எல்லையில் இந்திய வீரர்களுடன் சீனா வீரர்கள் கை கலப்பில் ஈடுபட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

ராணுவம் குவிப்பு
டோக்லாம் பிரச்சனைக்குப் பிறகு இந்தியா-சீனா எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் உருவானது. இருநாடுகளும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை எல்லைகளில் குவித்தன. இதனால் இந்தியா-சீனா யுத்தம் மூளுமோ என்கிற அச்சமும் எழுந்தது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றது. இதனையடுத்து இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியா- சீனா பேச்சுவார்த்தை
சீனாவின் எல்லைக்குட்பட்ட மால்டோ பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 5 மணிநேரத்துக்கும் அதிகமாக இருநாட்டு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய ராணுவ அதிகாரிகள் குழுவுக்கு லெப்.ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை வகித்திருந்தார். இப்பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், ஏப்ரல் இறுதியில் எல்லைகளில் என்ன நிலைமை இருந்ததோ அதை இருதரப்பும் கடைபிடிக்க வேண்டும் என்பது இந்தியாவின் கோரிக்கை.

ஏற்க முடியாத சீனா கோரிக்கை
ஆனால் சீனாவோ, எல்லையில் இந்தியா மேற்கொண்டு வரும் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியது. இதனை இந்திய அதிகாரிகள் ஏற்கவில்லை. இந்த பின்னணியில் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அதிகாரிகள் குழு லே பகுதிக்கு திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்
அந்த அறிக்கையில், இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழ்நிலைக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியா, சீனா அதிகாரிகள் ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியில் உருவாக்கப்பட்ட வழிகள் மூலமாக, தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்த நிலையில், இந்த ஈடுபாடுகள் குறித்து யூகமாகவோ, ஆதாரமற்றத் தகவல்களையோ வெளியிடுவது உதவிகரமாக இருக்காது. எனவே, ஊடகங்கள் இத்தகைய செய்திகளை வெளியிடுவதிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications