திடீர் பரபரப்பு! டெல்லியில் இருந்து தோஹா கிளம்பிய விமானம்.. திடீரென பாகிஸ்தானில் தரையிறங்கியது
டெல்லி: டெல்லியில் இருந்து புறப்பட்ட கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாக். நாட்டில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட QR579 என்ற கத்தார் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் தோஹாவுக்கு செல்ல இருந்தது.
இருப்பினும், இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கத்தார் விமானம் தொடர்பாக மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டரில், "QR579 - டெல்லி-தோஹா, கராச்சிக்கு திருப்பி விடப்பட்டதன் நிலை என்ன? இது தொடர்பாகப் பயணிகளுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உணவு அல்லது தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. வாடிக்கையாளர்களுக்கு எதுவும் தரவில்லை" என ட்வீட் செய்திருந்தார்.
அதேபோல கராச்சியில் தரையிறங்கி உள்ள கத்தார் விமானத்தில் இருக்கும் பயணி ஒருவர் தனது ட்விட்டரில், "இங்கு கராச்சியில் நாங்கள் காத்திருக்கிறோம். இங்குள்ள பலரும் தோஹாவில் இணைப்பு விமானங்களைப் பிடிக்க வேண்டும். ஆனால் கராச்சியில் இருந்து விமானம் எப்போது புறப்படும் என்பது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் இன்று அதிகாலை 3:50 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டதாகவும் காலை 5:30 மணிக்கு கராச்சியில் இந்த விமானம் தரையிறங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கராச்சியில் காத்திருக்கும் விமானத்தில் உள்ள பயணி ஒருவர் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "விமானம் தரையிறங்கியதும், நீண்ட நேரம் நாங்கள் விமானத்திலேயே காத்திருந்தோம். அதன் பின்னரே விமானத்தில் இருந்து வெளியேற எங்களை அனுமதித்தனர்.
இப்போது காலை 9 மணி ஆகிறது. விமானம் எப்போது புறப்படும் என்று அவர்கள் எங்களிடம் எதுவும் கூறவில்லை. இங்கே பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட காத்திருக்கின்றனர். மேலும், பலர் தோஹாவில் இருந்து இணைப்பு விமானங்களைப் பிடிக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications