பெகாசஸ் விவகாரம்... தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்.. மக்களின் வரிப்பணம் ரூ 133 கோடி வீண்
டெல்லி: பெகசாஸ் விவகாரம் காரணமாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கியுள்ள நிலையில், இதனால் பொதுமக்களின் வரிப்பணம் ரூ 133 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சரியாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக பெகாசஸ் விவகாரம் வெளியானது. இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ குரூப் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை மூலம் ஒருவரது மொபைலை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்.
இதன் மூலம் ஒருவர் யாருடன் என்ன பேசுகிறார், எங்குச் செல்கிறார் என அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். அதாவது அவர் செல்போனின் அனைத்து விஷயங்ளையும் கண்காணிக்க முடியும்.

பெகாசஸ் விகாரம்
இந்த பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி காங்கிரஸின் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் முக்கிய தலைவர்கள், 40 செய்தியாளர்கள் உட்படப் பலரது செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. நாடாளுமன்றத்தின் முதல் நாள் தொடங்கி அனைத்து நாட்களிலும் பெகாசஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்.

மோடி குற்றச்சாட்டு
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தக் கூட எதிர்க்கட்சிகள் விடவில்லை. நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பங்கள் அதிகரித்ததால், முதல் நாளே இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. மத்திய அமைச்சரவையில் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் அதிகம் இடம் பெற்றுள்ள நிலையில், அதை ஜீரணித்துக் கொள்ள முடியாமலேயே எதிர்க்கட்சிகள் அவையை முடக்குவதாகவும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
Recommended Video

ரூ 133 கோடி நஷ்டம்
இந்நிலையில், நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கியுள்ளதால் மக்களின் வரிப்பணம் சுமார் 133 கோடி ரூபாய் வீணாகியுள்ளதாக மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் நாடாளுமன்றம் மொத்தம் 107 மணி நேரம் செயல்பட்டிருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவையை முடக்கியதால் வெறும் 18 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் ரூ 133 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். 54 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டிய மக்களவை வெறும் ஏழு மணி நேரமும், 53 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டிய மாநிலங்களவை வெறும் 11 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது.

பிரதமர் மோடி
முன்னதாக, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகள் கடினமாகக் கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பதே எனது நோக்கம், ஆனால் அதேநேரம் அமைச்சர்கள் பதிலளிக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications