5 மாநில தேர்தல்: பிரசார பேரணி, பொது கூட்டம் நடத்த 31-ந்தேதி வரை தடை.. சில தளர்வுகளும் அறிவிப்பு
டெல்லி: கொரோனா பரவல் காரணமாக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பேரணி, பொது கூட்டங்கள் நடத்துவதற்கான தடையை 31-ந்தேதி வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. பிப்ரவரி 10ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

5 மாநில தேர்தல்
மணிப்பூரில் பிப்ரவரி 27-ம் தேதி, மார்ச் 3 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட உள்ளது. தற்போது நாட்டில் கொரோனா உச்சத்தில் உள்ளதால் கடுமையான கொரோனா தடுப்பு விதிகளுடன் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது.

பல்வேறு கட்டுப்பாடுகள்
இந்த 5 மாநிலங்ககளிலும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டு இருந்தன. வீடுவீடாக பிரசாரம் செய்ய 5 நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. பிரசாரம், பேரணிகள், பொது கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. முதலில் ஜனவரி 15 ஆம் தேதி வரை இந்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்பின்னர் ஜனவரி 22-ம் தேதி(இன்று) வரை தடை நீட்டிக்கப்பட்டது.

ஜனவரி 31 வரை நீட்டிப்பு
இன்றுடன் தடை முடிவடைய இருந்த நிலையில் தேர்தல் நடைபெறும் 5 மாநில சுகாதார செயலாளர்கள், மத்திய சுகாதார செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் காணொலியில் ஆலோசனை நடத்தியது. இதில் மேலும் பிரசாரம் செய்ய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? தளர்வுகள் கொடுக்கலாமா? என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பிரசாரம், பேரணிகள், பொது கூட்டம் நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் இதுதான்
அதே வேளையில் சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க ஏற்கனவே 5 பேருக்கு அனுமதி இருந்த நிலையில், தற்போது 10 பேர் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்யலாம்
என அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் தேர்தல் தொடர்புடைய கூட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளுக்குதான் இந்த தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications