5 மாநில தேர்தல்: பிரசார பேரணி, பொது கூட்டம் நடத்த 31-ந்தேதி வரை தடை.. சில தளர்வுகளும் அறிவிப்பு
டெல்லி: கொரோனா பரவல் காரணமாக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பேரணி, பொது கூட்டங்கள் நடத்துவதற்கான தடையை 31-ந்தேதி வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. பிப்ரவரி 10ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

5 மாநில தேர்தல்
மணிப்பூரில் பிப்ரவரி 27-ம் தேதி, மார்ச் 3 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட உள்ளது. தற்போது நாட்டில் கொரோனா உச்சத்தில் உள்ளதால் கடுமையான கொரோனா தடுப்பு விதிகளுடன் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது.

பல்வேறு கட்டுப்பாடுகள்
இந்த 5 மாநிலங்ககளிலும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டு இருந்தன. வீடுவீடாக பிரசாரம் செய்ய 5 நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. பிரசாரம், பேரணிகள், பொது கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. முதலில் ஜனவரி 15 ஆம் தேதி வரை இந்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்பின்னர் ஜனவரி 22-ம் தேதி(இன்று) வரை தடை நீட்டிக்கப்பட்டது.

ஜனவரி 31 வரை நீட்டிப்பு
இன்றுடன் தடை முடிவடைய இருந்த நிலையில் தேர்தல் நடைபெறும் 5 மாநில சுகாதார செயலாளர்கள், மத்திய சுகாதார செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் காணொலியில் ஆலோசனை நடத்தியது. இதில் மேலும் பிரசாரம் செய்ய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? தளர்வுகள் கொடுக்கலாமா? என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பிரசாரம், பேரணிகள், பொது கூட்டம் நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் இதுதான்
அதே வேளையில் சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க ஏற்கனவே 5 பேருக்கு அனுமதி இருந்த நிலையில், தற்போது 10 பேர் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்யலாம்
என அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் தேர்தல் தொடர்புடைய கூட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளுக்குதான் இந்த தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications