Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்பை தாக்குதலின் போது.. முன்னின்று போராடிய.. என்எஸ்ஜி முன்னாள் இயக்குநர் ஜெனரால் கொரோனாவால் பலி

Subscribe to Oneindia Tamil

'டெல்லி: மும்பை தாக்குதலின் போது, பயங்கரவாதிகளுக்கு எதிராக கவுன்டர் தாக்குதலை முன்னின்று நடத்திய தேசியப் பாதுகாப்புப் படையின் முன்னாள் இயக்குநர் ஜெனரால் ஜே.கே தத் கொரோனாவால் உயிரிழந்தார்.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையின் பாதிப்பு மோசமாக உள்ளது. இந்தாண்டு கொரோனா உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Former NSG chief who led 26/11 counter-terror ops succumbs to Covid

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, கவுன்டர் தாக்குதலை முன்னின்று நடத்தியவர் அப்போது தேசியப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனராலாக இருந்த ஜே.கே தத். இவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் டெல்லியிலுள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Former NSG chief who led 26/11 counter-terror ops succumbs to Covid

1971ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான ஜே.கே தத், கடந்த 2006 முதல் 2009 வரை தேசியப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரால் இருந்தவர். அப்போது தான் மும்பையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான கவுன்டர் தாக்குதலை அவர் முன்னின்று நடத்தினார். ஜே.கே தத் சிபிஐ மற்றும் சிஐஎஸ்டி உள்ளிட்ட படைகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+