மண்ணெண்ணெய் மானியத்திற்கு என்ட் கார்டு போட்ட மத்திய அரசு! சந்தை விலையில்தான் ஏழைகளும் வாங்க வேண்டும்
டெல்லி: படிப்படியாக, மண்ணெண்ணெய் விலையை ஏற்றப்பட்டுக் கொண்டே வந்த நிலையில், இப்போது மண்ணெண்ணைக்கான மானியத்தை முற்றிலும் நிறுத்தியுள்ளது மத்திய அரசு.
பொது வினியோகக் கடைகளை அகற்ற மத்திய அரசு முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஏழைகளின் வாழ்வாதாரத்தின் அடிப்படையான, மண்ணெண்ணை மீதான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மண்ணெண்ணைக்கு மானியம் வழங்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

மானியம் குறைப்பு
மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டில், மண்ணெண்ணெய் மானியம் ரூ .2,677.32 கோடியாக இருந்தது, இது முந்தைய நிதியாண்டில் ரூ .4,058 கோடியாக இருந்தது என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அரசு வழங்கும், மானியத் தொகை வெகுவாக குறைந்துவிட்டது. மானிய சுமையை குறைக்க ஒவ்வொரு இரு வாரங்களுக்கு ஒருமுறை மண்ணெண்ணெய் விலையை ஒரு லிட்டருக்கு 25 பைசா உயர்த்த அரசு கடந்த 2016ல் அனுமதி அளித்ததது.

சந்தை விலை
இதன்படி கடந்த 4 ஆண்டுகளில் மண்ணெண்ணெய் விலை மொத்தமாக ரூ.23.8 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் மண்ணெண்ணெய்க்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பட்ஜெட்டில் அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இப்போது சந்தை விலையில்தான் ரேஷன் கடைகளில் ஏழை, எளிய மக்களும் மண்ணெண்ணை வாங்கியாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
மண்ணெண்ணெய் விலை உயர்வு ஏறக்குறைய, ஏழைகளை தவிர, யாராலும் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்று சொல்லலாம். எதிர்க்கட்சிகளும் இது பற்றி எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து மட்டுமே எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தபடி உள்ளன.

எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள்
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களால் மண்ணெண்ணெய் தங்களது சமையல் மற்றும் விளக்கேற்றுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஏழைகள் வீடுகளுக்கு மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தின்கீழ், 8 கோடி இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், மண்ணெண்ணெய் நுகர்வு குறைந்துள்ளது.

மண்ணெண்ணை மானியம்
2010ம் ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்துவதிலிருந்து மத்திய அரசு விலகிக் கொண்டது. 2014ம் ஆண்டு அக்டோபர் முதல் டீசல் விலைகளை கட்டுப்படுத்துவதையும் மத்திய அரசு கைவிட்டு விட்டது. அதாவது இந்த இரண்டு எரிபொருட்களுக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டது. சமையல் எரிவாயு (எல்பிஜி) மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மட்டுமே மட்டுமே மானியம் தொடர்ந்தது. இப்போது மண்ணெண்ணை மானியத்திற்கும் என்டு கார்டு போட்டுள்ளது மத்திய அரசு. இதனால் ஏழைகள் அதிக செலவிட்டு அவற்றை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எல்பிஜிக்கு 2021-22 ஆம் ஆண்டில் ரூ .12,480 கோடி மானியம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. முந்தைய நிதியாண்டுக்கு ரூ .25,520.79 கோடி ஒதுக்கப்பட்டது. எனவே எல்பிஜி மானியமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications