தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: பிற மாநிலங்களில் பணிபுரியும் இடம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய- மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா லாக்டவுனால் இடம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்கள் இந்த தேசத்தையே உலுக்கி எடுத்தன. சாலை மார்க்கமாக நடந்தே சென்று மாண்டு போனவர்கள், தண்டவாளத்தையே பாதையாக்கி நடந்து போய் ரயில்களில் அடிபட்டு செத்து போனவர்கள் என நித்தம் நித்தம் நெஞ்சை பிழிய வைத்தன இந்த தொழிலாளர்கள் துயரம்.

இந்த விவகாரத்தை தாமே முன்வந்து விசாரித்து கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது உச்சநீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதில், இடம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் மத்திய- மாநில அரசுகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சொந்த ஊர் திரும்பும் இடம் பெயர் தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். அந்த பட்டியலில் அவர்கள் முன்பு எங்கே என்ன பணி செய்தார்கள் என்பதையும் சேர்க்க வேண்டும்.
இடம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களை மத்திய- மாநில அரசுகள், லாக்டவுனுக்குப் பின்னர் உருவாக்க வேண்டும். மேலும் லாக்டவுன் விதிமுறைகளை மீறியதாக இடம்பெயர் தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும் வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் மாநில அரசுகள் கேட்டுக் கொண்ட 24 மணிநேரத்துக்குள் இடம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications