Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக ஹிஜாப் வழக்கு.. அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.. தலைமை நீதிபதி ரமணா உத்தரவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முதலில் விசாரிக்கட்டும் என்று காங்கிரசை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா மாணவர்கள் பலர் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.

இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் பலர் இதற்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர். நேற்று இந்த வழக்கு விசாரணை 2 மணி நேரம் நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் பெரிய அமர்வில் விசாரணை நடக்க உள்ளது.

3 பேர் அமர்வு

3 பேர் அமர்வு

நேற்று இந்த ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பெரிய அமர்விற்கு மாற்றப்பட்டது. சர்ச்சைக்குரிய விஷயம் என்பதால் ஒரு நீதிபதி (கிருஷ்ணா தீட்சித்) அமர்வில் இருந்து 3 நீதிபதி அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித் (ஏற்கனவே வழக்கை விசாரித்த தனி நீதிபதி), ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. இன்று இந்த அமர்வு முதலில் இருந்து வழக்கை விசாரிக்கும்.

கோரிக்கை

கோரிக்கை

அவசர இடைக்கால உத்தரவை இதில் பிறப்பிக்க மனுதாரர்கள் தரப்பு கோரிக்கை வைத்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று காங்கிரசை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார். கபில் சிபல் தொடுத்த வழக்கில் கர்நாடகாவில் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவிகள் மீது கல்லடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய விஷயம். இது மதம் தொடர்பான விஷயம். இதை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.

கபில் சிபல்

கபில் சிபல்

ஹிஜாப் பிரச்சனை நாடு முழுக்க விவாதிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களிலும் இந்த பிரச்சனை பரவி வருகிறது. அதனால் இது உச்ச நீதிமன்றம் இதை விசாரிக்க வேண்டும்.தேர்வுகள் நடக்க இன்னும் 2 மாதம் மட்டுமே உள்ளது. நாங்கள் இன்று காலை மனுதாக்கல் செய்தோம். 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு இதை அவசரமாக விசாரிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இதில் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்பதால் இதை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க வேண்டும், என்று கபில் சிபல் கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் கர்நாடக ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முதலில் விசாரிக்கட்டும். இந்த வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது. இப்போதே துரிதமாக இதை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை விதிக்கிறதா என்று முதலில் பார்க்கலாம், என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+