8 மேஜர் பாயிண்ட்.. கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி? இந்திய மருத்துவ சங்கம் புது ‛அட்வைஸ்’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனாவில் கொரோனா பாதிப்பை அதிகரித்து வரும் ஓமிக்ரான் பிஎப் 7 திரிபு வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் 8 முக்கிய பாயிண்டுகளை குறிப்பிட்டு பொதுமக்களுக்கு அட்வைஸ் வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஓமிக்ரான் பிஎப் 7 திரிபு வைரஸால் தான் சீனாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது. சீனாவை தவிர மேலும் சில நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனால் உலக சுகாதார நிறுவனம் கவலையடைந்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அட்வைஸ் வழங்கி உள்ளது.

 எங்கெங்கு கொரோனா அதிகரிப்பு?

எங்கெங்கு கொரோனா அதிகரிப்பு?

சீனாவை போல் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இந்த நாடுகளில் கடந்த 24 மணிநேரத்தில் 5.37 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சீனாவில் பரவும் ஓமிக்ரான் பிஎப் 7 திரிபு வகை வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத், ஒடிசாவை சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அலர்ட்டாகும் இந்தியா

அலர்ட்டாகும் இந்தியா

இந்த பாதிப்பு அதிகரிக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளனர். மத்திய அரசு பல்வேறு ழிகாட்டு நெறிமுறைகளை வழங்க தொடங்கி உள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் அலர்ட் மோடில் இந்தியா உள்ளது.

ஐஎம்ஏ வழங்கிய அட்வைஸ்

ஐஎம்ஏ வழங்கிய அட்வைஸ்

இந்நிலையில் தான் தான் கொரோனா பரவல் காரணமாக ஐஎம்ஏ எனும் இந்திய மருத்துவ சங்கம் பொதுமக்களுக்கு அட்வைஸ் வழங்கி உள்ளது. இந்த சங்கம் சார்பில் 8 முக்கிய பாயிண்டுகளை குறிப்பிட்டு அதனை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளது.

முதல் 5 பாயிண்ட் என்ன?

முதல் 5 பாயிண்ட் என்ன?

அதன்படி பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி கழுவ வேண்டும். கூட்டம் அதிகமாக சேரும் திருமணம், அரசியல் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். சர்வதேச நாடுகளுக்கு பயணம் செய்வதை கைவிட வேண்டும்

 கடைசி 3 பாயிண்ட் என்ன?

கடைசி 3 பாயிண்ட் என்ன?

காய்ச்சல், தொண்டை வறட்சி, சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும். கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை முறையாக செலுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் அரசு வழங்கும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என 8 முக்கிய பாயிண்டுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவுரை வழங்கி உள்ளது.

 அரசுகளுக்கு ஒத்துழைப்பு

அரசுகளுக்கு ஒத்துழைப்பு

மேலும், இந்திய மருத்துவ சங்கம் மொத்தம் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களை கொண்டுள்ளது. இந்த குழு தொற்று நோயை எதிர்த்து போராடுவதில் உறுதியாக உள்ளது. மேலும் கொரோனா தடுப்புக்கான சிகிச்சை நடவடிக்கைகளில் அரசுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில் உறுதியாக உள்ளோம் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+