உ.பி அரசுக்கு எதிரான கருத்து... ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி கைது - ஜன.13 வரை நீதிமன்ற காவல்
உத்தரபிரதேச அரசு மற்றும் மாநில மருத்துவமனைகளுக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சோம்நாத் பாரதியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி மீது இன்று ரேபரேலியில் மை வீசப்பட்ட நிலையில், அவர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார். அவரை14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அமேதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிமினல் மிரட்டல் மற்றும் குழுக்களிடையே பகைமையை வளர்க்கும் வகையில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில மருத்துவமனைகளைப்பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாக சோம்நாத் பாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
டெல்லி எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி, ஒரு விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே வந்தபோது ஒரு இளைஞர் மை வீசினார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது மை வீசப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்று காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்லோக் குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஒரு வீடியோ கிளிப்பின் படி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ இந்தியில்,குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் நாய்களால் உருவானவர்கள் என்று கூறியுள்ளார்.
அவர் மீது மை வீசப்பட்ட சிறிது நேரத்திலேயே, பாரதி ஒரு வீடியோ கிளிப்பை ரீட்வீட் செய்து, ஆதித்யநாத்தை அவமதிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தி கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து சோம்நாத் பாரதியை இன்று காலை ரேபரேலியில் அமேதி போலீசார் கைது செய்தனர். மை வீசிய சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தனது ட்விட்டர் பதிவில், யோகி ஜி, எங்கள் எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி ஜி உங்கள் அரசுப் பள்ளியைப் பார்க்கப் போகிறார். நீங்கள் அவரை நோக்கி மை வீசுகிறீர்களா? பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். உங்கள் பள்ளிகள் மோசமானவையா? யாராவது உங்கள் பள்ளியைப் பார்க்கச் சென்றால், ஏன்? நீங்கள் மிகவும் பயப்படுகிறீர்கள்? உங்கள் மாநில பள்ளிகளை சரிசெய்யவும். அதை எப்படி செய்வது என்று தெரியாவிட்டால், மணீஷ் சிசோடியாவிடம் கேளுங்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
இதே போல ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தனது ட்வீட்டில், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சோம்நாத் பாரதி, ரேபரேலியில் பாஜக நபர்களால் தாக்கப்பட்டார். பள்ளிகள், மருத்துவமனைகளின் அவலத்தை கேள்விக்குட்படுத்திய பின்னர் யோகி அரசு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தத் தொடங்கியது இது சர்வாதிகாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Shocked to learn that my bail application has been kept pending till 13th January n I am sent to judicial custody of 14 days.
— Adv. Somnath Bharti (@attorneybharti) January 11, 2021
இதனிடையே தான் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட எம்எல்ஏ சோம்நாத் பாரதி ட்வீட் செய்துள்ளார்.
It's a blatant lie given by yogi police that I refused notice of 41A. Court should direct tracing phone locations of IO Mahender Singh n myself. I will leave politics if I am found lying. It's height of injustice. I urge one n all to speak. I urge supreme court to intervene.
— Adv. Somnath Bharti (@attorneybharti) January 11, 2021
41A அறிவிப்பை நான் மறுத்துவிட்டேன் என்று யோகி போலீசார் சொல்வது அப்பட்டமான பொய். ஐ.ஓ. மகேந்தர் சிங் என் தொலைபேசி இருப்பிடங்களை நீதிமன்றம் நேரடியாகக் கண்டறிய வேண்டும். நான் சொல்வது பொய் என்று தெரிந்தால் நான் அரசியலை விட்டு வெளியேறுவேன். இது அநீதியின் உச்சம். அனைவரையும் பேசும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
Police wrongly claimed that I refused to accept 41A notice, a mandatory requirement under CrPC and judgement of Arnesh Kumar. Let phone locations be traced, truth will be out. I will keep fighting for People of UP against misrule of Yogi. https://t.co/3y76tCymrn
— Adv. Somnath Bharti (@attorneybharti) January 11, 2021
யோகியின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன் என்றும் பதிவிட்டுள்ளார் சோம்நாத் பாரதி. உங்கள் மீது மை வீசப்படலாம். பொய்யான வழக்குகள் புனையப்படலாம். குண்டர்களால் தாக்கப்படலாம். நீதிமன்றத்தில் அழுத்தம் கொடுத்து சிறைக்கு அனுப்பப்படலாம். ஆனாலும் நாங்கள் போராடுவோம் என்றும் சோம்நாத் பாரதி பதிவிட்டுள்ளார்.