இந்தியாவுக்கு தக்க நேரத்தில் உதவும் உலக நாடுகள்.. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா?
டெல்லி: தலைநகரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படை விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து 352 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டன.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தைத் தாண்டியே பதிவாகி வருகிறது.
கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டிலுள்ள சுகாதார கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகப் பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு
குறிப்பாக, தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியுள்ள பாத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரு மருத்துவர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இதுமட்டுமின்றி டெல்லியுள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதாக மருத்துவமனைகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றன.

சிங்கப்பூரிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள்
இந்நிலையில், நிலைமையைச் சமாளிக்கச் சிங்கப்பூரிலிருந்து காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்து சுகாதாரத் துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இந்திய விமானப்படைக்குச் சொந்தமான IL 76 விமானம் மூலம் டெல்லிக்கு 352 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்படுகிறது. தற்போது சூழ்நிலையில், டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க இது உதவும்" என்று தெரிவித்தார்.

ஹைகோர்ட் கண்டனம்
டெல்லிக்குத் தேவையான முழு ஆக்சிஜன் கோட்டாவை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும், அதைச் செயல்படுத்தத் தவறியதாக மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நீதிபதிகள் கூறுகையில், "நீங்கள் டெல்லிக்குத் தேவையான 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக வழங்க மாட்டீர்களா? இங்கு நிலவும் நிலையைப் பார்த்தும் பார்க்காதது போல நீங்கள் இருக்கலாம். ஆனால் எங்களால் அப்படி இருக்க முடியாது" என்று தெரிவித்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இஸ்ரேல் நாட்டிலிருந்து உதவிகள்
சிங்கப்பூர் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு மருத்து உதவிகளை அனுப்பி வருகின்றன. இஸ்ரேல் நாட்டிலிருந்து இன்று மருத்துவ பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், கொரோனா சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களைக் கொண்டிருந்தது. முன்னதாக நேற்று பிரிட்டன் நாட்டிலிருந்து சுமார் 900 டன் மருத்து ஆக்சிஜன் இந்தியா எடுத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சண்டைக்கு மட்டும் வாங்க.. சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை! ட்ரம்பை லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்யும் ஈரான்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
பழிவாங்கியே தீருவோம்! இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் -
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு












Click it and Unblock the Notifications