சரியாக ஆய்வு செய்யாமல் கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தினால் பேரழிவு: டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: சரியாக ஆராய்ச்சி செய்யாமல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினால் அது பேரழிவை கொண்டு வந்துவிடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரியவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு 12 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கும், எப்போது தடுப்பூசி ஆய்வு பணிகள் நிறைவடையும், மேலும் இதற்கு ஒரு கால நிர்ணயம் வகுக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கைலாஷ் வாசுதேவ் ஆஜராகி வாதிட்டார். டிஎன் பட்டேல் மற்றும் ஜோதி சிங் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், உரிய வகையில் ஆராய்ச்சிகள் நடைபெறாமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும். ஆராய்ச்சி விவகாரங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது என்று உறுதிபட தெரிவித்தனர் .
முன்னதாக, ஜைடஸ் கேடில்லா என்ற நிறுவனம் 12 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆய்வு பணிகளை நிறைவு செய்து விட்டதாகவும், அனுமதி உள்ளிட்ட சில வேலைகளுக்காக அந்த தடுப்பூசி காத்திருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications