ரொம்ப மோசம்! இது 75 ஆண்டு இல்லாததது! அக்னிபாத்தில் அமைதி காக்கும் மோடியை விளாசிய காங்கிரஸ்
டெல்லி: ‛‛இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில் முப்படையில் பணியாற்றும் அதிகாரிகள் அரசின் கொள்கை முடிவுகளை பாதுகாக்க முன்நிறுத்தப்படுவது இதுதான் முதல் முறை. இத்திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வாய் திறக்காதது ஏன்?'' என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவின் முப்படைகளில் ஆள்சேர்ப்புக்காக அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. அதாவது மத்திய பாஜக அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

காங்கிரஸ் போராட்டம்
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறது. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்தே அறிக்கையை வெளியிட்டார். மேலும், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ப சிதம்பரம் உள்பட மூத்த தலைவர்கள் அக்னிபாத் திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதி தர்ணா நடந்தது. இன்றும் இது தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மல்லிகார்ஜூன கார்கே
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில் முப்படையில் பணியாற்றும் அதிகாரிகள் அரசின் கொள்கை முடிவுகளை பாதுகாக்க முன்நிறுத்தப்படுவது இதுதான் முதல் முறை. இத்திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வாய் திறக்காதது ஏன்?'' என விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம் ஏன்?
அதாவது அக்னிபாத் போராட்டம் நடக்கும் நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என 2 நாட்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினர். நேற்றைய ஆலோசனைக்கு பிறகு பாதுகாப்புத்துறையின் உயரதிகாரிகளான ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, கடற்படை துணை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப்படை சார்பில் ஏர்மார்ஷல் எஸ்கே ஷா உள்ளிட்டவர்கள் நிருபர்களை சந்தித்து பேசினர்.

விளக்கமளிக்கும் அதிகாரிகள்
இந்த வேளையில் 3 பேரும் அக்னிபாத் திட்டம் திரும்ப பெறப்படாது என கூறியதோடு, கடற்படை, விமானப்படையில் அக்னிவீரர்கள் சேர்ப்புக்கான தேதியை அறிவித்தனர். மேலும் முப்படை தலைமை தளபதிகளும் தனித்தனியே அக்னிபாத் திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். இதனால் தான் அரசின் திட்டம் தொடர்பான கொள்கை முடிவை முழுமையாக செயல்படுத்த முப்படை அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications