ரொம்ப மோசம்! இது 75 ஆண்டு இல்லாததது! அக்னிபாத்தில் அமைதி காக்கும் மோடியை விளாசிய காங்கிரஸ்
டெல்லி: ‛‛இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில் முப்படையில் பணியாற்றும் அதிகாரிகள் அரசின் கொள்கை முடிவுகளை பாதுகாக்க முன்நிறுத்தப்படுவது இதுதான் முதல் முறை. இத்திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வாய் திறக்காதது ஏன்?'' என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவின் முப்படைகளில் ஆள்சேர்ப்புக்காக அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. அதாவது மத்திய பாஜக அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

காங்கிரஸ் போராட்டம்
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறது. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்தே அறிக்கையை வெளியிட்டார். மேலும், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ப சிதம்பரம் உள்பட மூத்த தலைவர்கள் அக்னிபாத் திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதி தர்ணா நடந்தது. இன்றும் இது தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மல்லிகார்ஜூன கார்கே
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில் முப்படையில் பணியாற்றும் அதிகாரிகள் அரசின் கொள்கை முடிவுகளை பாதுகாக்க முன்நிறுத்தப்படுவது இதுதான் முதல் முறை. இத்திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வாய் திறக்காதது ஏன்?'' என விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம் ஏன்?
அதாவது அக்னிபாத் போராட்டம் நடக்கும் நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என 2 நாட்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினர். நேற்றைய ஆலோசனைக்கு பிறகு பாதுகாப்புத்துறையின் உயரதிகாரிகளான ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, கடற்படை துணை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப்படை சார்பில் ஏர்மார்ஷல் எஸ்கே ஷா உள்ளிட்டவர்கள் நிருபர்களை சந்தித்து பேசினர்.

விளக்கமளிக்கும் அதிகாரிகள்
இந்த வேளையில் 3 பேரும் அக்னிபாத் திட்டம் திரும்ப பெறப்படாது என கூறியதோடு, கடற்படை, விமானப்படையில் அக்னிவீரர்கள் சேர்ப்புக்கான தேதியை அறிவித்தனர். மேலும் முப்படை தலைமை தளபதிகளும் தனித்தனியே அக்னிபாத் திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். இதனால் தான் அரசின் திட்டம் தொடர்பான கொள்கை முடிவை முழுமையாக செயல்படுத்த முப்படை அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications