ரொம்ப மோசம்! இது 75 ஆண்டு இல்லாததது! அக்னிபாத்தில் அமைதி காக்கும் மோடியை விளாசிய காங்கிரஸ்
டெல்லி: ‛‛இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில் முப்படையில் பணியாற்றும் அதிகாரிகள் அரசின் கொள்கை முடிவுகளை பாதுகாக்க முன்நிறுத்தப்படுவது இதுதான் முதல் முறை. இத்திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வாய் திறக்காதது ஏன்?'' என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவின் முப்படைகளில் ஆள்சேர்ப்புக்காக அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. அதாவது மத்திய பாஜக அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

காங்கிரஸ் போராட்டம்
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறது. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்தே அறிக்கையை வெளியிட்டார். மேலும், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ப சிதம்பரம் உள்பட மூத்த தலைவர்கள் அக்னிபாத் திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதி தர்ணா நடந்தது. இன்றும் இது தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மல்லிகார்ஜூன கார்கே
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில் முப்படையில் பணியாற்றும் அதிகாரிகள் அரசின் கொள்கை முடிவுகளை பாதுகாக்க முன்நிறுத்தப்படுவது இதுதான் முதல் முறை. இத்திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வாய் திறக்காதது ஏன்?'' என விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம் ஏன்?
அதாவது அக்னிபாத் போராட்டம் நடக்கும் நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என 2 நாட்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினர். நேற்றைய ஆலோசனைக்கு பிறகு பாதுகாப்புத்துறையின் உயரதிகாரிகளான ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, கடற்படை துணை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப்படை சார்பில் ஏர்மார்ஷல் எஸ்கே ஷா உள்ளிட்டவர்கள் நிருபர்களை சந்தித்து பேசினர்.

விளக்கமளிக்கும் அதிகாரிகள்
இந்த வேளையில் 3 பேரும் அக்னிபாத் திட்டம் திரும்ப பெறப்படாது என கூறியதோடு, கடற்படை, விமானப்படையில் அக்னிவீரர்கள் சேர்ப்புக்கான தேதியை அறிவித்தனர். மேலும் முப்படை தலைமை தளபதிகளும் தனித்தனியே அக்னிபாத் திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். இதனால் தான் அரசின் திட்டம் தொடர்பான கொள்கை முடிவை முழுமையாக செயல்படுத்த முப்படை அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications