இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் 11 மணி நேர பேச்சுவார்த்தை! லே விரையும் ராணுவ தளபதி.. என்ன நடக்கிறது?
டெல்லி: இந்தியா மற்றும் சீன நாட்டைச் சேர்ந்த ராணுவ கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை, திங்கள்கிழமையான நேற்று 11 மணி நேரம் தொட்ரந்து நடைபெற்றது. இந்த நிலையில், இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே இன்று லே பகுதிக்கு விரைகிறார்.
Recommended Video
லடாக் கிழக்கு பகுதியில் சீனா ராணுவத்தை குவித்து இந்திய நிலப்பரப்பிற்குள் ஊடுருவியதால், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். அப்போது ஏற்பட்ட கை கலப்பு மற்றும் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
முன்னதாக, ஜூன் 6ம் தேதி, 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் சீன தெற்கு சிஞ்சியாங் ராணுவ மாவட்டத்தின் தளபதி மேஜர் ஜெனரல் லின் லியு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதுதான் சரியானது.. லடாக் குறித்து பிரதமர் மோடி சொன்ன கருத்து.. புகழ்ந்து தள்ளும் சீன ஊடகங்கள்!

பழைய நிலை திரும்ப வேண்டும்
ஏப்ரல் மாதம், எந்த நிலை இருந்ததோ, அதே நிலை, எல்லையில் நிலவ வேண்டும். சீன படைகள் வாபஸ் போக வேண்டும் என்று, இந்தியா அப்போது வலியுறுத்தியது. ஆனால், இதன்பிறகு 15ம் தேதிதான், இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. எனவே, சீனா அழைப்புவிடுத்தும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு இந்திய தரப்பு செல்லவில்லை.

இரவு வரை பேச்சுவார்த்தை
இந்த நிலையில், நேற்று காலை மீண்டும், ஹரிந்தர் சிங் மற்றும் லின் லியு ஆகிய இருவரும் ஆலோசனை நடத்தினர். திங்கள்கிழமை இரவு 10:30 மணி வரை பேச்சுவார்த்தை தொடர்ந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தளபதிகளுடன், அவரவர் படைகளின் முக்கியஸ்தர்கள் சிலரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தை
சீன பகுதியில் உள்ள சுஷுல்-மோல்டோ பாயிண்ட் பகுதியில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீன ராணுவம் (பி.எல்.ஏ) "திட்டமிட்டு இந்திய வீரர்களை தாக்கியது" என்ற பிரச்சினையை எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் சீனத் தரப்பு அளித்த பதில் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

ராணுவ தளபதி வருகை
ராணுவத் தளபதிகளின் பேச்சுவார்த்தை சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற நிலையில், இன்று லே பகுதிக்கு ராணுவ தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே வருகை தருகிறார். 14 கார்ப்ஸ் அதிகாரிகளுடன், எல்லையிலுள்ள நிலைமை மற்றும் சீன ராணுவத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்ய உள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications