வார்த்தைகளை கவனமாக கையாளுங்க.. மோடியை விமர்சித்த மன்மோகன்.. பாஜக கடும் பதிலடி
டெல்லி: இந்திய ராணுவத்தை அவமதிப்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாரதீய ஜனதா கண்டித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், ராஜதந்திரத்துக்கும், தீர்க்கமான தலைமைக்கும் தவறான தகவல் மாற்று இல்லை. பொய்யான அறிக்கைகள், வசதியான கூட்டாளிகள் மூலம் உண்மையை அடக்க முடியாது. பிரதமர் மோடி பேசும் போது வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்.

சீனா கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கி தற்போது வரை இந்திய எல்லைக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கையும், பாங்காங் ஏரியையும் கைப்பற்ற பல முறை இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி உள்ளது. அதை நாம் அனுமதிக்கவே கூடாது. சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.
Former PM Dr. Manmohan Singh’s statement is mere wordplay.
— Jagat Prakash Nadda (@JPNadda) June 22, 2020
Sadly, the conduct and actions of top leaders of the Congress party will not make any Indian believe such statements.
Remember, this is the same INC that always questions & demoralises our armed forces.
மேலும் சீனாவின் தாக்குதலில் எல்லையைக் காக்கும் சண்டையில் தனது உயிரைத் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த கர்னல் பி சந்தோஷ் பாபு, மற்றும் வீரர்கள் உயிர் தியாகத்துக்கு நீதியை உறுதி செய்யவேண்டும் என பிரதமரையும், அரசையும் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு குறைவாக ஏதேனும் செய்வது மக்களின் நம்பிக்கைக்கு வரலாற்று துரோகம் என்றும் மன்மோகன் சிங் கடுமையாக கூறியிருந்தார்.
மன்மோகன் சிங்கின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தொடர்ச்சியான ட்வீட்டுகளில், மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கை வெற்று சொல். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் நடத்தை மற்றும் நடவடிக்கைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். காங்கிரஸ் "எங்கள் ஆயுதப்படைகளை எப்போதும் கேள்விக்குள்ளாக்குகிறது. 130 கோடி இந்தியர்கள் பிரதமர் நரேந்திர மோடியை முழுமையாக நம்புகிறார்கள், அவர் "மிகவும் சோதனை காலங்களில் தனது நிர்வாக அனுபவத்தை" காட்டியுள்ளார்.
Former PM Dr. Manmohan Singh’s statement is mere wordplay.
— Jagat Prakash Nadda (@JPNadda) June 22, 2020
Sadly, the conduct and actions of top leaders of the Congress party will not make any Indian believe such statements.
Remember, this is the same INC that always questions & demoralises our armed forces.
ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான ஜக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தவர்கள் 43,000 கி.மீ நீளமுள்ள எல்லையில் சண்டையே போடாமல் மோசமான யுக்திகள் மற்றும் கொள்கைகளுடன் சீனாவிடம் சரண் அடைந்தவர்கள் என்று விமர்சித்துள்ளார். மன்மோகன் சிங் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அழைப்பு விடுத்துள்ளதை சுட்டிக்காட்டியள்ள ஜேபி நட்டா, தேச ஒற்றுமை என்பதன் அர்த்தத்தை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications