இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது.
Recommended Video
உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸுக்கு இது வரை 31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 7.16 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில் கடந்த 2 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,332 ஆக உள்ளது. 1007 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். நாடு முழுவதும் 7696 பேர் குணமடைந்துள்ளனர். 22,085 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,318 ஆகவும், டெல்லியில் 3,314 ஆகவும், குஜராத்தில் 3,744 ஆகவும் மத்திய பிரதேசத்தில் 2,387 ஆகவும், ஆந்திராவில் 1,259 ஆகவும், ராஜஸ்தானில் 2,364 ஆகவும் தமிழகத்தில் 2058 ஆகவும், தெலுங்கானாவில் 1,004 ஆகவும், உத்தரப்பிரதேசத்தில் 2053 ஆகவும் உள்ளது.
திங்கள்கிழமை மாலை முதல் இந்தியாவில் 51 பேர் பலியாகிவுள்ளனர். அதில் மகாராஷ்டிராவில் 27 பேரும், குஜராத்தில் 11 பேரும், மத்திய பிரதேசத்தில் 7 பேரும், ராஜஸ்தானில் 5 பேரும், ஜம்மு காஷ்மீரில் ஒருவரும் ஆவர். பலியானோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
அந்தமான் நிகோபார் தீவுகளில் 33 பேரும் லடாக்கில் 22 பேரும், மேகாலயாவில் 12 பேரும் புதுவையில் 8 பேரும் கோவாவில் 7 பேரும், மணிப்பூர், திரிபுராவில் தலா இருவரும், மிசோரம், அருணாசல பிரதேசத்தில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications