டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீன பதற்றத்திற்கிடையே.. வங்கக் கடல் வந்த அமெரிக்க நவீன போர்க் கப்பல்.. இந்திய கடற்படையுடன் பயிற்சி

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கக்கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே, இந்தியா மற்றும் அமெரிக்க போர்க்கப்பல் இணைந்து ராணுவ ஒத்திகை நடத்தியுள்ளன.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லை பதற்றம் நிலவும் இந்த நேரத்தில், உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ், என்ற, விமானந்தாங்கி போர்க் கப்பலை, அமெரிக்கா இந்த ராணுவ பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சில பகுதிகளில் தங்கள் ராணுவத்தை சீனா பின் வாங்கிக் கொண்டாலும், இன்னும் சில பகுதிகளில் அதன் ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

குவிக்கப்பட்ட 10 ஜாகுவார் போர் விமானங்கள்.. அந்தமானில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு.. என்ன நடக்கிறது?குவிக்கப்பட்ட 10 ஜாகுவார் போர் விமானங்கள்.. அந்தமானில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு.. என்ன நடக்கிறது?

சீனாவுக்கு எதிராக

சீனாவுக்கு எதிராக

சீனாவுக்கு எதிராக உலக நாடுகளின் அணிதிரட்டலுக்கு, இந்தியா காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சீனாவின் கடல்சார் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை ரோந்துகள், பயிற்சிகளில் ஈடுபடுகிறது.

மிகப்பெரிய போர்க் கப்பல்

மிகப்பெரிய போர்க் கப்பல்

இந்திய பசிபிக் மண்டலத்தில் இந்த நாடுகளின் கடற்படை சமீபகாலமாக மேலும் தங்களது நட்பை பலப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் PASSEX என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் பங்கேற்கும் ராணுவ ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் என்றழைக்கப்படுவது அமெரிக்காவின், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்பதாகும்.

பயிற்சி தீவிரம்

பயிற்சி தீவிரம்

இந்தப் போர்க்கப்பல், இந்திய கடற்படை போர்க்கப்பல்களுடன், பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தவிர, டிக்கோடெரோகா, யுஎஸ்எஸ் பிரின்ஸ்டன், யுஎஸ்எஸ் ஸ்டெரெட் மற்றும் யுஎஸ்எஸ் ரால்ப் ஜான்சன் ஆகிய போர்க் கப்பல்களும், இன்று இந்தியப் பெருங்கடலில் இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்றன.

இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க் கப்பல்

இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க் கப்பல்

கடந்தமாதம் இதுபோன்ற கடற்படை பயிற்சியில், ஜப்பான் நாட்டு கடற்படையுடன் இணைந்து செயல்பட்டது இந்திய கடற்படை. அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் கடந்த சனிக்கிழமை மலாக்கா நீரிணை வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது.
யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சுமார் 100,000 டன் எடையுள்ளது. 90 போர் விமானங்களை சுமக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In the midst of India's border row with China, a fleet of Indian naval warships on Monday carried out a military drill with a US navy carrier strike group led by nuclear-powered aircraft carrier USS Nimitz, off the coast of Andaman and Nicobar Islands, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X