ஐபிஎல்ல நிறுத்துங்க... வீரர்களோட உயிரோட விளையாடாதீங்க... முன்னாள் வீரர் கோரிக்கை
டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி கேகேஆர் -ஆர்சிபி இடையில் நடைபெறவிருந்த நிலையில் கேகேஆர் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கேன்சல்ஐபில் என்பது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் முன்னாள் வீரர்களும் ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகினற்னர்.
கேன்சல் ஐபிஎல்... ட்விட்டர்ல ட்ரெண்டிங்... கேன்சல் செய்யற ஐடியா இல்லீங்க... பிசிசிஐ உறுதி

30வது போட்டி தள்ளிவைப்பு
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 30வது போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதவிருந்தன. இந்நிலையில் கேகேஆர் அணியின் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றைய போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த பாதிப்புகள்
கடினமான பயோ பபுள் சூழலையும் மீறி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் அணிகளுக்கிடையில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதேபோல சிஎஸ்கேவின் வீரர்கள் அல்லாத மூவருக்கும் டிடிசிஏவின் ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ட்விட்டரில் ட்ரெண்ட்
இதையடுத்து ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ட்விட்டரிலும் கேன்சல்ஐபிஎல் என்பது ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே முன்னாள் வீரர்களும் ஐபிஎல் போட்டிகளை த்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

பாதுகாப்பற்ற சூழல்
இதனிடையே, முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத், பாதுகாப்பான பயோ பபுளில் திடீரென கொரோனா பாதிப்பு எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். வீரர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். கேகேஆர் வீரர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது பயோ பபுளில் பாதுகாப்பின்மையை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கேள்விகளை எழுப்பிய பாதிப்பு
இந்த கடினமான சூழலிலும் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்த பிசிசிஐ தீவிரமாக இருப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வீரர்கள் பாதுகாப்பான முறையில் மக்களுக்கு கொண்டாட்டத்தை அளித்து வருவதாக தான் நம்பியதாகவும் ஆனால் தற்போது கேகேஆர் வீரர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications