இந்தியா வந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.. நாளை மோடியோடு சந்திப்பு.. உற்றுநோக்கும் டிரம்ப்!
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவீத் ஷரீப் இந்தியா வருகை புரிந்துள்ளார்.
டெல்லி: ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவீத் ஷரீப் இந்தியா வருகை புரிந்துள்ளார். நாளை பிரதமர் மோடியை ஜாவீத் ஷரீப் சந்திக்கிறார்.
ஈரான் - அமெரிக்கா இடையில் நிகழ்ந்து வரும் பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையிலான சண்டையாக உருவெடுத்துள்ளது. விரைவில் இது உலகப் போராட் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் டிரோன் தாக்குதல் நிகழ்த்திய அமெரிக்கா ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்தது.

இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் 12 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில்தான் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவீத் ஷரீப் இந்தியா வருகை புரிந்துள்ளார். நாளை பிரதமர் மோடியை ஜாவீத் ஷரீப் சந்திக்கிறார். ஈரான் அமெரிக்கா இடையே சண்டை குறித்து இவர்கள் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Delhi: Iran Foreign Minister Javad Zarif arrives in India. He will meet Prime Minister Narendra Modi tomorrow. pic.twitter.com/2y9KR6nGOA
— ANI (@ANI) January 14, 2020
ஈரான் உடனான வர்த்தகத்தை கடந்த வருடமே இந்தியா நிறுத்துவிட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக, மிகுந்த யோசனைக்கு பின், இந்தியா ஈரான் உடன் வர்த்தகத்தை முறித்தது. இதனால் கடந்த 7 மாதமாக இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இல்லை.
இதனால் ஈரான் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவுடனான சண்டை காரணமாக ஈரான் பொருளாதாரம் மேலும் சரிந்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையிலான சண்டையில் இந்தியா இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.
இதற்கு இடையில்தான் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவீத் ஷரீப் இந்தியா வருகை புரிந்துள்ளார்.நாளை பிரதமர் மோடியோடு இவர் இரண்டு நாட்டு உறவு குறித்து பேசுவார். இந்த சந்திப்பை அமெரிக்கா கவனமாக உற்றுநோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications