ஜாமியாவில் மாணவர்களை சுட்டவருக்கு யார் காசு கொடுத்தது.. சொல்லுங்கள்.. ராகுல் காந்தி பரபரப்பு கேள்வி
டெல்லி ஜாமியா மிலியா பல்கலையில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராம் பகத் கோபாலுக்கு யார் பணம் கொடுத்தது என்று காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலையில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராம் பகத் கோபாலுக்கு யார் பணம் கொடுத்தது என்று காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லி ஜாமியா மிலியா துப்பாக்கி சூடு நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்தது.

நேற்று இந்த போராட்டத்தில் ராம் பகத் கோபால் என்ற நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார். இந்த துப்பாக்கி சூட்டிற்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த துப்பாக்கி சூடு குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி, துப்பாக்கியால் அங்கே மாணவர்களை சுட்டவருக்கு காசு கொடுத்தது யார் என்று கேட்டார். முன்னதாக ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் செய்யும் மக்கள் பாஜக கட்சி விமர்சனம் செய்து வந்தது. அங்கு போராடும் மக்களுக்கு யாரோ காசு கொடுக்கிறார்கள்.
அவர்களுக்கு தினமும் 500 ரூபாய் காசு கொடுத்து போராட்டம் செய்ய அழைத்து வருகிறார்கள். அதுதான் போராட்டம் இத்தனை நாள் நடக்க காரணம் என்று குறிப்பிட்டு இருந்தனர். அதற்கு பதிலடி தரும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
“I cannot teach you violence, as I do not believe in it. I can only teach you not to bow your heads before anyone, even at the cost of your life.”
— Rahul Gandhi (@RahulGandhi) January 30, 2020
-Mahatma Gandhi pic.twitter.com/wHIdlgtAji
முன்னதாக இன்னொரு டிவிட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காந்திஜியின் மேற்கோள் ஒன்றை இங்கே சொல்ல விரும்புகிறேன். நான் வன்முறையை நம்பும் ஆள் கிடையாது. அதனால் என்னால் வன்முறையை போதிக்க மஜூடியாது. நான் உங்களுக்கு ஒன்றுதான் சொல்ல முடியும். எப்போதும் தலை நிமிர்ந்து இருங்கள். யாருக்காகவும் தலை குனிய வேண்டாம். உங்கள் உயிரே போனாலும் தலை குனிய வேண்டாம், என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications