டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் கட்சியை நெருக்கடியில் இருந்து ராகுல் காந்தியால் மட்டுமே மீட்க முடியும்: மல்லிகார்ஜூன கார்கே!

Google Oneindia Tamil News

டெல்லி: தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியால் மட்டுமே மீட்க முடியும் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் விலகுவது அக்கட்சிக்கு மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதோடு, ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

6 மீனவர்கள் கைதுக்கு கண்டனம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்! 6 மீனவர்கள் கைதுக்கு கண்டனம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி

காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி

இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதியும் இறுதி செய்யப்பட்டது. இதன்படி, தேர்தலுக்கான அறிவிக்கை செப்டம்பரில் 22 ஆம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

அக்டோபர் 17-ந் தேதி

அக்டோபர் 17-ந் தேதி

செப்டம்பர் 30 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும். அக்டோபர் 19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறுகிற நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க மறுப்பதாக பரவலாக பேசப்படுகிறது. எனினும் இது குறித்து ராகுல் காந்தி இதுவரை வெளிப்படையாக பேசவில்லை.

மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜூன கார்கே இதுபற்றி கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் தொடர்பான ஒட்டுமொத்த சூழலும் தெளிவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை இந்த நெருக்கடியான தருணத்தில் ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும்.

ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்

ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்

இது தான் எனது தனிப்பட்ட விருப்பமும் கூட. கட்சியினரின் எண்ணமும் இது தான். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க ராகுல் காந்தியால் மட்டுமே முடியும். குறிப்பாக கட்சியை ஒருங்கிணைத்து மேலும் பலப்படுத்த ராகுல் காந்தியால் மட்டுமே முடியும். பாரத் ஜோடோ யாத்திரையில் கூட கட்சியினரை திரள வைக்கும் திறன் அவருக்கு மட்டுமே உள்ளது" என்றார்.

English summary
Mallikarjuna Kharge has said that only Rahul Gandhi can save the Congress party from the current crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X