என் தந்தை ஹீரோ...என் பெஸ்ட் பிரண்ட் - எல்.எஸ்.லிடரின் மகள் உருக்கம்
தந்தையின் மறைவு நாட்டுகான இழப்பு என்று கூறிய எல்.எஸ்.லிடரின் மகள், தனது தந்தையின் நினைவுகளுடன் இனி பயணிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி: என் தந்தையின் மறைவு நாட்டுக்கான இழப்பு. அவர் எனது ஹீரோ என்று எல்.எஸ்.லிடரின் 17 வயது மகள் ஆஷ்னா கூறியுள்ளார். என் தந்தை இதுவரை என்னுடன் இருந்த நினைவுகளுடன் பயணிப்பேன். இனி வரும் காலங்களில் நல்லது நடக்கும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர்.
இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் சிங், சாத்பால், சவுஹான், குல்தீப், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், தாஸ் , சாய் தேஜா ஆகிய 13 பேரும் உயிரிழந்தனர்.
விமானத்தின் குரூப் கேப்டன் வரும் சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு தற்போது பெங்களூருவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிர் நீர்த்த 13 பேரது உடல்களுக்கும் நேற்று தமிழக முதல்வர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனி விமானம் மூலம் உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பிபின் ராவத் மற்றும் வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
டெல்லி கண்டோன்மெண்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் ராணுவ விரர் எல்.எஸ் லிடருக்கு, துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடனும், குடும்ப முறைப்படியும் இறுதிச் சடங்கு நடைபெற்றது. லிடரின் உடலுக்கு அவரது மனைவி கீதிகாவும், 17 வயது மகள் ஆஷ்னாவும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆஷ்னா, தன் தந்தை தனக்கு ஹீரோ என்றும், தனக்கு பெஸ்ட் ஃபிரண்ட் என்றும் கூறினார். தந்தையின் மறைவு நாட்டுகான இழப்பு என்று கூறினார். மேலும் தந்தையின் நினைவுகளுடன் இனி பயணிப்பேன் என்று கூறிய ஆஷ்னா.. இனி வரும் காலங்களில் நல்லது நடக்கும் என எதிர்ப்பார்ப்பபதாக தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து முப்படைகளின் விசாரணைக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உண்மையை கண்டறியும்வரை யூகம் செய்யாதீர்கள். விரிவான விசாரணை நடத்தி விரைவாக உண்மைகள் வெளியிடப்படும். இறந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும்வகையில் யூகங்களை தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய விமானப்படையின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications