''நாங்க இப்ப இந்தியாவோட கூ….க்கு மாறிட்டோம்… அப்போ நீங்க..?'' உலக நாடுகளை தெறிக்கவிட்ட நைஜீரியா!
டெல்லி: டுவிட்டரை தடை செய்த நைஜீரியா இந்தியாவின் 'கூ' ஆப்-ஐ பயன்படுத்த தொடங்கி இருக்கிறது.
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
அதுவும் நமது இந்திய மக்களின் வாழ்வில் மேற்கண்ட சமூக வலைத்தளங்கள் ஒரு அங்கமாக மாறிப் போய் விட்டன.

நம்பகத்தன்மை இல்லை
நகரம் முதல் கிராமம் வரை சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இந்தியாவில் இந்த வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள், தகவல்களில் நம்பகத்தன்மை இல்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியது. இந்த சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில், மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை அறிமுகப்படுத்தியது.

டுவிட்டர்-மத்திய அரசு சண்டை
டுவிட்டர் தவிர மற்ற சமூக ஊடக நிறுவனங்கள் இதை முதலில் ஒப்புக் கொண்டன. ஆனால் கடைசி வரை பிடிவாதம் பிடிக்கும் டுவிட்டர், இன்று வரை இந்த விதிகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. ஏற்கனவே மத்திய அரசுக்கும், டுவிட்டருக்கும் இடையே டூல் கிட், ப்ளூ டிக் தொடர்பாக கடும் சண்டை நடந்து வருகிறது.

நைஜீரியா அதிரடி தடை
இந்தியா மட்டுமின்றி பல்வேறு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கும், டுவிட்டருக்கும் இடையே சிறு உரசல்கள் நிகழ்ந்து வருகின்றன. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கையும் அவ்வப்போது நீக்கி விளையாட்டு காட்டியது டுவிட்டர். இந்த நிலையில் நைஜீரியா நாட்டிலும் டுவிட்டருக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டருக்கு எதிராக ஆவேசம்
நைஜீரியா அதிபர் முகமது புகாரி பிரிவினைவாதிகளுக்கு எதிராக டுவிட்டரில் ஒரு கருத்து தெரிவித்து இருந்தார். அந்த கருத்து சரியல்ல என்று டுவிட்டர் அதனை நீக்கியது. இதனை தொடர்ந்து அதிபருக்கும், டுவிட்டர் நிறுவனத்துக்கும் இடையே கடும் சண்டை முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த அதிபர் முகமது புகாரி, நைஜீரியாவில் டுவிட்டருக்கு அதிரடி தடை விதித்தார்.

koo ஆப்-க்கு மாறினார்
ஆனால் அவர் அடுத்து செய்த செயல்தான் இப்போது உலகத்தின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. டுவிட்டருடன் உறவை முறித்தமுகமது புகாரி, டுவிட்டருக்கு மாற்றாக கருதப்படும் இந்தியாவின் koo ஆப்-பில் அரசின் ஆதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார். இதனால் koo, இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பிரபலமாக தொடங்கியுள்ளது.

அது என்ன 'கூ' ஆப்?
'கூ' ஆப் தொழில்முனைவோர்களான அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயாங்க் பித்வட்கா ஆகியோரால் இணைந்து பெங்களூரில் நிறுவப்பட்டதாகும். இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் 'கூ' ஆப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களின் அரசு துறைகளும் முக்கிய தகவல்களை இதில் பகிர்ந்து வருகின்றன. முதலில் கன்னட மொழியில் மட்டும் இருந்த
'கூ' ஆப் பின்னர் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளை சேர்த்தது. கடந்த மே மாதம் நிலவரப்படி 60 மில்லியன் மக்கள் 'கூ' ஆப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications