60 வயதை கடந்தவருக்கு பூஸ்டர் டோஸ் போடனுமா? 'இது கட்டாயமில்லை..' மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 60 வயதைக் கடந்தவர்களுக்கான வேக்சின் தொடர்பாக முக்கிய உத்தரவை மத்திய சுகாதாரத் துறை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
இந்தியாவில் முதலில் வேக்சின் பணிகள் மந்தமாக நடைபெற்றாலும் கூட, அதன் பின்னரே கடந்த ஆகஸ்ட் மாதம் வேக்சின் பணிகள் மெல்ல வேகமெடுக்கத் தொடங்கியது.

பூஸ்டர் டோஸ்
இதுவரை இந்தியாவில் 125 கோடி வேக்சின் போடப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக பூஸ்டர் பணிகளைத் தொடங்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். அதன்படி கடந்த சனிக்கிழமை (டிச.25) நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3ஆம் டோஸ் போடப்படும் என அறிவித்தார். அதேபோல 15-18 வயதானவர்களுக்கு வேக்சின் போடப்படும் என அறிவித்தார்.

60 வயதைக் கடந்தவர்கள்
ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் வேக்சின் போடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல 60 வயதைக் கடந்தவர்களுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

தேவையில்லை
அதன்படி 60 வயதைக் கடந்தவர்களுக்கு 3ஆவது டோஸ் போட மருத்துவர்களின் பரிந்துரை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 60 வயதைக் கடந்தவர்கள் வேக்சின் போடும் முன் தங்கள் மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதாவது 60 வயதைக் கடந்தவர்கள் வழக்கம் போல ஜனவரி 10 முதல் கோவின் தளத்தில் பதிவு செய்து கொண்டு பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளலாம்.
Recommended Video

தேர்தல் ஆணையம்
முன்னதாக கடந்த வாரம் ஓமிக்ரான் அச்சம் காரணமாக உத்தரப் பிரதேச தேர்தலை ஒத்திவைக்க அலகாபாத் ஐகோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதையடுத்து சுகாதாரத் துறை செயலாளர் தேர்தல் ஆணையர் உடன் ஆலோசனையும் நடத்தினார். அதன்படி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் முன்னுரிமை அளித்து தடுப்பூசி பணிகளை அதிகரிக்குமாறு சுகாதாரத் துறையிடம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மிக விரைவாக 100% வேக்சின் என்ற இலக்கை அடைய ஏதுவாக வேக்சின் பணிகளை வேகமாக மேற்கொள்ளும்படி சுகாதார அமைச்சகத்தைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது..
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications